திருமணத்திற்கு வந்த பெண்ணிற்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து பாலியல் வன்கொடுமை!

Published:

vankodumai
vankodumai

பிப்ரவரி 3 ஆம் தேதி இரவு மும்பையில் பேருந்துக்குள் 19 வயது பெண் ஒருவர் இரண்டு பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரை போலீசார் திங்கள்கிழமை கைது செய்தனர், அதே நேரத்தில் பஸ்ஸின் ஓட்டுநராக இருந்த இரண்டாவது குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

அந்த பெண்ணும் குற்றம் சாட்டப்பட்டவரும் ஒரே அப்பார்ட்மெண்ட்டில் வசித்து வந்தனர். அன்றிரவு அங்கு நடந்த திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தின் போது அந்த பெண் தாகமாக இருந்ததால் தண்ணீர் குடிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த குற்றம் சாட்டப்பட்ட நபர் குளிர்பானம் குடிக்க கொடுத்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட இருவரும் ஒரே கட்டிடத்தில் தங்கியிருந்ததால், அந்தப் பெண் அவர்களை சந்தேகிக்கவில்லை, அவர்கள் வழங்கிய குளிர்பானத்தை குடித்துள்ளார்’ என்று கார்கர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் விவேக் போயர் கூறினார்.

மேலும் மயக்கமருந்து கலந்த குளிர்பானங்களை அவர்கள் கொடுக்க அந்த பெண்ணும் அறியாது குதித்துள்ள. பின்னர் அவர்கள் பேச்சு கொடுத்து கொண்டிருக்கும் போதே அந்த பெண் அங்கையே மயக்கமடைந்துள்ளார். மற்றொரு நபருக்கு சொந்தமான பேருந்து அங்கு நின்று இருந்ததை தொடர்ந்து அதில் அந்த பெண்ணை ஏற்றிய இருவரும் பேருந்திற்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

பின்னர் பாதி மயக்கம் தெளிந்த நிலையில் அந்த பெண்ணை ஒரு ஒதுக்குப்புறமாக போட்டு விட்டு அவரது மொபைல் போனை எடுத்து சென்றுள்ளனர். மயக்கம் தெளிந்து எழுந்த அந்த பெண் கத்தி கூச்சலிட்டதை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

பின்னர் அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்த்துறை 19 வயது கல்லூரி மாணவனை கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள ஒரு நபரை தேடி வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img