வீட்டிற்கு செல்ல தாமதமானதால் வன்கொடுமை என நாடகம்! மாட்டிய ஹைதராபாத் மாணவி!

Hyderabad-3
Hyderabad-3

ஹைதராபாத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வரும் மாணவி ஒருவர் கல்லூரியிலிருந்து திரும்பும் போது ஆட்டோ டிரைவர் தன்னை கடத்தி 4 பேருடன் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் மாணவி போலியாக நாடகமாடியது தெரியவந்துள்ளது. கல்லூரியில் இருந்து வீடு திரும்பவதற்கு தாமதமானதால், தாய்க்கு என்ன காரணம் சொல்வது என்று பயந்து இந்த நாடகத்தை நடத்தியதாக மாணவி போலீசாரிடம் ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஹைதராபாத் காவல் எல்லைக்குட்பட்ட ராச்சகொண்டா போலீஸ் கமிஷனர் மகேஷ்பகவத் கூறுகையில், அன்றைய தினம் சுமார் ஆறரை மணி அளவில் அந்த மாணவியின் உறவினரிடம் இருந்து போலீஸ் எண் 100-க்கு மாணவி கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது

விரைந்து செயல்பட்ட போலீசார் பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்கு பின் அந்த மாணவியை கட்கேசர் பகுதியிலுள்ள காலி இடம் ஒன்றில் இருந்து அரை குறை ஆடைகளுடன் மீட்டனர். அதனைத் தொடர்ந்து அந்த மாணவி ஏறி சென்ற ஆட்டோவின் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினோம்.

அதன்பின் மேலும் சில ஆட்டோ டிரைவர்களின் போட்டோக்களை எடுத்து வந்து அந்த மாணவியிடம் காண்பித்து, உன்னை பாலியல் பலாத்காரம் செய்தவர்களின் புகைப்படங்கள் இவற்றில் உள்ளதா என்று கேட்டோம். அப்போது ஒரு ஆட்டோ டிரைவரின் புகைப்படத்தை காண்பித்து அவர், என்னை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தவர்களில் இந்த நபரும் இருந்தார் என்று அந்த மாணவி கூறினார்.

அந்த ஆட்டோ டிரைவரை அழைத்து வந்து விசாரணை நடத்தியபோது, மாணவி கடத்தல், பாலியல் பலாத்காரம் ஆகியவை நடைபெற்றதாக கூறிய சமயத்தில் அவர் தான் ஷாப்பிங் மால் ஒன்றில் இருந்ததாகவும், அதன்பின் பாருக்கு சென்று மது அருந்தியதாகவும் கூறினார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த ஷாப்பிங் மால் மற்றும் பார் ஆகியவற்றில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா பதிவு காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது அவர் கூறியது உண்மை என்று தெரிய வந்தது. மேலும் சந்தேகம் அடைந்த போலீசார் கட்கேசர் பகுதியில் உள்ள மேலும் பல சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த மாணவி ஆட்டோவை விட்டு இறங்கி சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றது தெரியவந்தது.இது போன்ற அறிவியல் பூர்வமான விசாரணைகளுக்கு பின் அந்த மாணவியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அன்றைய தினம் கல்லூரியிலிருந்து வீடு திரும்ப நேரமாகிவிட்டது.

எனவே அதற்கான காரணத்தை தாயிடம் கூட இயலாத நிலையில், இந்த மெகா நாடகத்தை அரங்கேற்றினேன் என்று ஒப்புக்கொண்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

Topics

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Entertainment News

Popular Categories