December 6, 2025, 1:08 PM
29 C
Chennai

வீட்டிற்கு செல்ல தாமதமானதால் வன்கொடுமை என நாடகம்! மாட்டிய ஹைதராபாத் மாணவி!

Hyderabad-3
Hyderabad-3

ஹைதராபாத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வரும் மாணவி ஒருவர் கல்லூரியிலிருந்து திரும்பும் போது ஆட்டோ டிரைவர் தன்னை கடத்தி 4 பேருடன் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் மாணவி போலியாக நாடகமாடியது தெரியவந்துள்ளது. கல்லூரியில் இருந்து வீடு திரும்பவதற்கு தாமதமானதால், தாய்க்கு என்ன காரணம் சொல்வது என்று பயந்து இந்த நாடகத்தை நடத்தியதாக மாணவி போலீசாரிடம் ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஹைதராபாத் காவல் எல்லைக்குட்பட்ட ராச்சகொண்டா போலீஸ் கமிஷனர் மகேஷ்பகவத் கூறுகையில், அன்றைய தினம் சுமார் ஆறரை மணி அளவில் அந்த மாணவியின் உறவினரிடம் இருந்து போலீஸ் எண் 100-க்கு மாணவி கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது

விரைந்து செயல்பட்ட போலீசார் பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்கு பின் அந்த மாணவியை கட்கேசர் பகுதியிலுள்ள காலி இடம் ஒன்றில் இருந்து அரை குறை ஆடைகளுடன் மீட்டனர். அதனைத் தொடர்ந்து அந்த மாணவி ஏறி சென்ற ஆட்டோவின் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினோம்.

அதன்பின் மேலும் சில ஆட்டோ டிரைவர்களின் போட்டோக்களை எடுத்து வந்து அந்த மாணவியிடம் காண்பித்து, உன்னை பாலியல் பலாத்காரம் செய்தவர்களின் புகைப்படங்கள் இவற்றில் உள்ளதா என்று கேட்டோம். அப்போது ஒரு ஆட்டோ டிரைவரின் புகைப்படத்தை காண்பித்து அவர், என்னை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தவர்களில் இந்த நபரும் இருந்தார் என்று அந்த மாணவி கூறினார்.

அந்த ஆட்டோ டிரைவரை அழைத்து வந்து விசாரணை நடத்தியபோது, மாணவி கடத்தல், பாலியல் பலாத்காரம் ஆகியவை நடைபெற்றதாக கூறிய சமயத்தில் அவர் தான் ஷாப்பிங் மால் ஒன்றில் இருந்ததாகவும், அதன்பின் பாருக்கு சென்று மது அருந்தியதாகவும் கூறினார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த ஷாப்பிங் மால் மற்றும் பார் ஆகியவற்றில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா பதிவு காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது அவர் கூறியது உண்மை என்று தெரிய வந்தது. மேலும் சந்தேகம் அடைந்த போலீசார் கட்கேசர் பகுதியில் உள்ள மேலும் பல சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த மாணவி ஆட்டோவை விட்டு இறங்கி சுமார் 4 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றது தெரியவந்தது.இது போன்ற அறிவியல் பூர்வமான விசாரணைகளுக்கு பின் அந்த மாணவியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அன்றைய தினம் கல்லூரியிலிருந்து வீடு திரும்ப நேரமாகிவிட்டது.

எனவே அதற்கான காரணத்தை தாயிடம் கூட இயலாத நிலையில், இந்த மெகா நாடகத்தை அரங்கேற்றினேன் என்று ஒப்புக்கொண்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories