ஜாக்கிரதை ‘அந்த’ மாதிரி கூகுள்ல சர்ச் பண்றீங்களா? உடனே காவல்துறைக்கு செய்தி போய் விடும்!

Google-search
Google-search

யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு, மாநில போலீசாருடன் இணைந்து ஆபாசம் அல்லது தவறான விஷயங்களுக்காக இணையத்தைப் பயன்படுத்தும் நபர்களுக்கு எதிராக மற்றொரு முக்கியமான நடவடிக்கை எடுத்துள்ளது.

மாநிலத்தில் இதுபோன்ற நடவடிக்கைகளை தடுக்கவும், கட்டுப்படுத்தவும், அதிகாரிகள் ஒரு திட்டத்தை மேற்கொண்டுள்ளனர், அதில் ஆன்லைனில் ஆபாசம் சார்ந்த தகவல்களை தேடும் நபரின் விவரங்கள் ஒரு எஸ்எம்எஸ் மூலம் காவல்துறையை சென்றடையும்.

ஒரு நபர் ஆபாசம் அல்லது தவறான உள்ளடக்கத்திற்காக இணையத்தில் உலாவ தொடங்கும்போது, உடனே ​​காவல்துறையினரிடம் இருந்து 1090 என்ற எண்ணிலிருந்து எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு SMS வரும்.

இந்த நடவடிக்கை மக்களின் மனநிலையை மாற்ற எடுக்கப்பட்டுள்ளதாக உ.பி. ஏ.டி.ஜி நீரா ராவத் தெரிவித்தார். இதன்மூலம் புதிய மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்தின் உதவியுடன் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்க முடியும் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார்.

‘டிஜிட்டல் சக்ரவாயு’ (பெண்களின் பாதுகாப்பிற்கான 360 டிகிரி இன்போசிஸ்டம்) எனப்படும் திட்டத்தின் மூலம் பெண்களுக்கு டிஜிட்டல் அணுகலுக்கான ரோட்மேப்பை அரசு உருவாக்கியுள்ளது. ஆரம்பத்தில் இது வெறும் ஆறு மாவட்டங்களில் ஒரு முயற்சி திட்டமாக மட்டுமே தொடங்கப்பட்டதாகவும், இப்போது இது மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும் என்றும் ராவத் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் ‘ஹுமாரி சுரக்ஷா’ (Humari Suraksha) என்று அழைக்கப்படும். மேலும் இது உத்தரப்பிரதேசத்தில் உள்ள அனைத்து இணைய பயனர்களையும் சென்றடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories