ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்தியப் பிரதேச ஆளுநரின் மகன் லக்னோவில் உள்ள அவரது இல்லத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மத்திய பிரதேசம் மாநில ஆளுநர் ராம்நரேஷ் யாதவின் மகன் சாய்லேஷ் யாதவ், மத்தியப் பிரதேசத்தில் நடந்த தேர்வு வாரிய ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். சாய்லேஷ் யாதவ் மரணத்துக்கான உண்மையான காரணம் தெரியவரவில்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, காவல் துறை அதிகாரி வீரேந்திர பகதூர் சிங் கூறுகையில், “ஆளுநர் ராம்நரேஷ் யாதவ்வின் அரசு வீட்டில் இறந்த நிலையில் சாய்லேஷ் யாதவ் கிடப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. அதன்படி விசாரித்து வருகிறோம்…” என்றார். இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேச தொழில்நுட்ப தேர்வுகள் வாரியம் 131 பேரை பணி நியமனம் செய்ததில் 48 பேர் சட்டவிரோதமாக பணிக்கு நியமிக்கப்பட்டனர். இந்த ஊழலில் சாய்லேஷ் பெயரும் இடம்பெற்றிருந்தது. இந்தப் பணி நியமன முறைகேடு குறித்து மாநில சிறப்பு அதிரடிப் படை விசாரணை நடத்தி வருகிறது. ராம்நரேஷ் யாதவ்,உத்தரப் பிரதேச முதலமைச்சராக் இருந்தவர். 2011ல் காங்கிரஸ் கட்சியினால் மத்திய பிரதேச ஆளூநராக நியமிக்கப்பட்டவர்.
ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ம.பி.,ஆளுநர் மகன் மர்ம மரணம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

