2 நாட்களே உள்ளன! ஓய்வூதியம் பெறுவோர் இதை செய்யத் தவறினால்…

pension - 2026

ஓய்வூதியம் பெறும் முதியவர்கள் அவர்களுடைய ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது அவசியமாகும். நவம்பர் மாதத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதிமுறை நடைமுறையில் இருந்து வந்தது.

இந்நிலையில் மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், நவம்பர் 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 31-ஆம் தேதி வரையில் தங்களுடைய ஆயுள் சான்றிதழை தாக்கல் செய்யலாம் என்று கூறப்பட்டது.

இதன் பின்னர், 2021 பிப்ரவரி 28 வரை சமர்ப்பிக்கலாம் என்றும் கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இது பென்ஷன் வாங்குபவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அதற்கான கால அவகாசம் இன்னும் சில நாட்களே உள்ளதால் உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களுக்கு பென்ஷன் கிடைக்காது.

மேலும் பென்ஷன் வாங்குபவர்கள் தங்களுடைய ஆயுள் சான்றிதழை வீட்டிலிருந்தபடியே சமர்ப்பிக்கலாம் அல்லது போஸ்ட் ஆபீஸ் மூலமாகவும் செய்யலாம். ஆன்லைன் மூலமாக டிஜிட்டல் முறையில் சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பதாரர் ஆதார் நம்பர், செல்போன் நம்பர் இருக்க வேண்டும்.

ஆன்லைன் மூலமாக:

முதலில் ஜீவன் பிரமான் என்ற செயலியை பதிவிறக்கம் செய்து இதில் new registration என்பதில் சென்று ஆதார் நம்பர், வங்கிக் கணக்கு நம்பர், பெயர், செல்போன் நம்பர், பென்சன் பேமெண்ட் ஆர்டர் (PPO) ஆகிய விவரங்களைப் பதிவுசெய்ய வேண்டும்.

இதையடுத்து “Send OTP” என்பதை கிளிக் செய்தால் செல்போன் நம்பருக்கு ஓடிபி வரும். அதைப் பதிவிட்டு submit கொடுக்க வேண்டும். பின்னர் ஜீவன் பிரமான் செயலியில் OTP எண் மூலம் login செய்ய வேண்டும்.

இதையடுத்து “Generate Jeevan Pramaan” என்பதைத் தேர்ந்தெடுத்து ஆதார் நம்பர், செல்போன் நம்பர் ஆகியவற்றை பதிவிடவும். பிறகு “generate OTP” என்பதை கிளிக் செய்தால் உங்களது மொபைல் நம்பருக்கு ஓடிபி நம்பர் வரும். அதைப் பதிவிடவும்.

PPO எண், பெயர், பென்சன் கொடுக்கும் ஏஜென்சியின் பெயர் போன்ற விவரங்களைப் பதிவிட வேண்டும். ஆதார் விவரங்களை வைத்து கை ரேகையை ஸ்கேன் செய்தால் ஜீவன் பிரமான் பத்திரம் திரையில் தோன்றும். ஆயுள் சான்றிதழ் கிடைப்பது குறித்த உறுதிப்படுத்தும் செய்தி மொபைல் எண்ணுக்கு SMS ஆக வரும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Topics

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

மறு தேர்தல் ஆறு மாதத்திற்கு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் குடியரசுத் தலைவரின் பெயரில் கவர்னர் ஆட்சி செய்வார். இத்தகைய சூழ்நிலைகளில், ஆளுநர் நடுநிலையுடன் செயல்பட வேண்டும்

பஞ்சாங்கம் மே 8 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories