மூளையில் துளைத்த நாடாப்புழு! வலிப்பு நோயால் அவதியுற்ற சிறுவன்! அரிதான ஆபரேஷன்!

Published:

IMG 20210325 WA0014 - 2026

நாடாப்புழு மூளையில் துளைத்துக் கொண்டு சென்றதால் வந்த வினை.

10 வயது சிறுவனுக்கு அரிதான அறுவை சிகிச்சை.

ஆபரேஷன் மூலம் குணப்படுத்திய நியூரோ சர்ஜன் ஹனுமா ஸ்ரீநிவாஸ் ரெட்டி.

கடந்த 5 ஆண்டுகளாக வலிப்பு நோயால் அவதிப்பட்டு தினமும் வலது கையை இழுத்தபடி இருந்த 10 வயது சிறுவனுக்கு குண்டூரைச் சேர்ந்த நியூரோ சர்ஜன் டாக்டர் பவனம் ஹனும சீனிவாச ரெட்டி மிகவும் அரியதான அறுவை சிகிச்சை செய்து நோயைக் குணப்படுத்தினார்.

ஆபரேஷன் விவரங்களை புதன்கிழமையன்று குண்டூரில் அவர் மீடியாவுக்கு தெரிவித்தார்.

பிரகாசம் மாவட்டம் இங்கொல்லுவைச் சேர்ந்த புருசு வீர்ராஜு, மகேஸ்வரி தம்பதிகளின் 10 வயது சிறுவன் மகேஷ். 2015-ல் இருந்து ஃபிட்ஸ் நோயால் சிரமப்பட்டு வந்தான். எவ்வளவு மருந்துகள் எடுத்துக் கொண்டாலும் குணமாகவில்லை.

கடந்த மாதம் 15 ஆம் தேதி இரவு உறங்கிய 8 மணி நேரம் தவிர நாள் முழுவதும் சிறுவனின் வலது கை நிற்காமல் இழுத்துக் கொண்டே இருந்தது. அதனால் சிறுவனின் பெற்றோர் அவனை குண்டூரு ஜிஹெச் அழைத்துச் சென்றார்கள். ப்ருந்தா நியூரோ சென்டருக்கு செல்லும்படி அங்கு ரெஃபர் செய்தார்கள். பிரெயின் சர்ஜரிகளுக்கு உபயோகப்படும் மிகவும் நவீன மருத்துவக் கருவி “நியூரோ நேவிகேஷன் டெக்னாலஜி அனிமேட்டட் 3டி ப்ரெய்ன் மூவ்” பயன்படுத்தி சிறுவனின் மூளையில் இருந்த கட்டியை இந்த மாதம் 17ஆம் தேதி டாக்டர் ஹனும ஸ்ரீநிவாஸ் ரெட்டி நீக்கினார். டாக்டர் த்ரிநாத் உதவி செய்தார்.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

ஆபரேஷன் செய்து வெளியில் எடுத்த டியூமரை பயாப்சி பரிசோதனை செய்தபோது ‘நியூரோ சிஸ்டி செர்கோஸிஸ் ஆஃப் பிரைன்’ என்று கண்டறிந்தாக டாக்டர் சீனிவாச ரெட்டி கூறினார்.

இது ஒரு டேப் வேர்ம் எனப்படும் நாடாப்புழு மூலம் ஏற்படும் என்றும் பன்றி மாமிசம் தின்பவர்களோடு கூட காய்கறிகள் மற்றும் பழங்களை சரியாக கழுவாமல் தின்பவர்களுக்கும் நியூரோ சிஸ்டி செர்கோஸிஸ் முட்டைகளிலிருந்து இந்த டேப் புழுக்கள் வெளி வருவதால் இந்த பிரச்சினை ஏற்படுவதாக அவர் விவரித்தார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img