பூங்காவை சுத்தம் செய்த கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன்!

Published:

tamilizai2 - 2026

தெலுங்கானாவின் ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜன் புதுச்சேரிக்கு பொறுப்பு துணைநிலை ஆளுநராக செயல்பட்டு வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் புதுவை தாவரவியல் பூங்காவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு உதிர்ந்து விழுந்த மரங்களின் இலைகள் மற்றும் குப்பைகள் அப்புறப்படுத்தப்படாமல் கிடந்துள்ளது. இதனையடுத்து, அந்த பூங்காவை சுத்தப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டார்.

8bbe2413 8e84 4d9f b31e 6b2e9c552299 - 2026

இதனையடுத்து, என்.எஸ்.எஸ். மற்றும் தன்னார்வலர்கள் புதுவை தாவரவியல் பூங்காவை நேற்று சுத்தப்படுத்தினர். இந்த பணிகளை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் துவங்கி வைத்தார். அப்போது அவரும் இணைந்து தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். இந்த தூய்மைப்படுத்தும் பணியில் பல மாணவ, மாணவிகளும் ஈடுபட்டனர்.

ALSO READ:  ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

Related articles

Recent articles

spot_img