December 5, 2025, 9:21 PM
26.6 C
Chennai

கொரோனா: களமிறங்கிய ட்ரோன்!

dron 1
dron 1

இந்தியாவில் கொரோனா இரண்டாம் பரவல் கோர தாண்டவம் ஆடிவருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்தைத் தாண்டிச் செல்கிறது. நாளொன்றுக்கு உயிரிழப்பு நான்காயிரத்தை நெருங்கி வருகிறது.

மூன்றாம் அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக மத்திய அரசின் அறிவியல் ஆலோசகர் விஜய்ராகவன் சொல்லியிருக்கிறார்.

ஏற்கெனவே இரண்டாம் அலையின் தீவிரத்தால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுள்ள நிலையில், மூன்றாம் அலையைத் தாங்குவார்களா என்ற பீதி எழுந்துள்ளது.

ஆந்திர மாநிலத்திலும் கொரோனா தொற்று பரவல் அதிதீவிரமாக உள்ளது. இதனால் அங்கு முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இச்சூழலில் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள இஸ்ரோவுக்கு அருகே ஊழியர்களுக்கான குடியிருப்பு பகுதி இருக்கிறது.

இப்பகுதியில் வசிக்கும் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என மொத்தம் 300 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி 30 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது.
பெரும்பாலோனோர் பாதிக்கப்பட்டுள்ளதால் ஒருவருக்கொருவர் உதவும் சூழல் இல்லாமல் போயுள்ளது.

இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களையும் மருத்துவப் பொருள்களையும் வழங்க புதிய முயற்சி ஒன்றை கையாண்டுள்ளனர்.

அதற்காக ஆளில்லாம சிறிய ரக விமானமான ட்ரோன்களின் உதவியை நாடியிருக்கிறார்கள். இதற்காக சென்னையைச் சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் ட்ரோன்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அக்னிஷ்வர் ஜெயபிரகாஷ் கூறுகையில், “குடியிருப்பில் வசிக்கும் இஸ்ரோ ஊழியர்களுக்குத் தேவையான மருந்துகள் மற்றும் காய்கறிகளை வழங்கவும், அந்தப் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கவும், இந்த ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன. குறிப்பாக சோதனை ஓட்டம் நல்ல முறையில் நடந்து முடிந்துள்ளது. விதமாக ட்ரோன்கள் செயல்படுகின்றன” என்றார். இந்த முயற்சி விரைவில் செயல்பாட்டுக்கு வரவிருக்கிறது. தற்போது இதே நிறுவனத்துடன் கர்நாடக மாநில அரசும் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன்மூலம் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களுக்கு கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட மருத்துவப் பொருள்களைக் கொண்டுசெல்லவும், கிருமிநாசினி தெளிக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்தியாவிலேயே முதல் மாநிலமாக ட்ரோன் செயல்பாட்டை கர்நாடகா நடைமுறைக்குக் கொண்டு வரவிருக்கிறது. இது நல்ல பலனளிக்கும் பட்சத்தில் மற்ற மாநிலங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories