கொரோனா: களமிறங்கிய ட்ரோன்!

dron 1
dron 1

இந்தியாவில் கொரோனா இரண்டாம் பரவல் கோர தாண்டவம் ஆடிவருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்தைத் தாண்டிச் செல்கிறது. நாளொன்றுக்கு உயிரிழப்பு நான்காயிரத்தை நெருங்கி வருகிறது.

மூன்றாம் அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக மத்திய அரசின் அறிவியல் ஆலோசகர் விஜய்ராகவன் சொல்லியிருக்கிறார்.

ஏற்கெனவே இரண்டாம் அலையின் தீவிரத்தால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுள்ள நிலையில், மூன்றாம் அலையைத் தாங்குவார்களா என்ற பீதி எழுந்துள்ளது.

ஆந்திர மாநிலத்திலும் கொரோனா தொற்று பரவல் அதிதீவிரமாக உள்ளது. இதனால் அங்கு முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இச்சூழலில் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள இஸ்ரோவுக்கு அருகே ஊழியர்களுக்கான குடியிருப்பு பகுதி இருக்கிறது.

இப்பகுதியில் வசிக்கும் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என மொத்தம் 300 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி 30 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது.
பெரும்பாலோனோர் பாதிக்கப்பட்டுள்ளதால் ஒருவருக்கொருவர் உதவும் சூழல் இல்லாமல் போயுள்ளது.

இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களையும் மருத்துவப் பொருள்களையும் வழங்க புதிய முயற்சி ஒன்றை கையாண்டுள்ளனர்.

ALSO READ:  எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

அதற்காக ஆளில்லாம சிறிய ரக விமானமான ட்ரோன்களின் உதவியை நாடியிருக்கிறார்கள். இதற்காக சென்னையைச் சேர்ந்த கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் ட்ரோன்கள் பயன்படுத்தப்படவுள்ளன.
இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அக்னிஷ்வர் ஜெயபிரகாஷ் கூறுகையில், “குடியிருப்பில் வசிக்கும் இஸ்ரோ ஊழியர்களுக்குத் தேவையான மருந்துகள் மற்றும் காய்கறிகளை வழங்கவும், அந்தப் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கவும், இந்த ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன. குறிப்பாக சோதனை ஓட்டம் நல்ல முறையில் நடந்து முடிந்துள்ளது. விதமாக ட்ரோன்கள் செயல்படுகின்றன” என்றார். இந்த முயற்சி விரைவில் செயல்பாட்டுக்கு வரவிருக்கிறது. தற்போது இதே நிறுவனத்துடன் கர்நாடக மாநில அரசும் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதன்மூலம் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களுக்கு கொரோனா தடுப்பூசி உள்ளிட்ட மருத்துவப் பொருள்களைக் கொண்டுசெல்லவும், கிருமிநாசினி தெளிக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்தியாவிலேயே முதல் மாநிலமாக ட்ரோன் செயல்பாட்டை கர்நாடகா நடைமுறைக்குக் கொண்டு வரவிருக்கிறது. இது நல்ல பலனளிக்கும் பட்சத்தில் மற்ற மாநிலங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories