December 6, 2025, 6:02 AM
23.8 C
Chennai

கொரோனா: ஹாஸ்பிடல்லுகக்கு மாமனாரை முதுகில் சுமந்து சென்ற மருமகள்!

nigharigha
nigharigha

அசாம் மாநிலத்தில் கொரோனா பாதித்த மாமனாரை முதுகில் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்த மருமகளுக்கு நெட்டிசன்கள் தரப்பில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

மருமகள் நிகாரிகாவின் கணவரும் கொரோனா பாதித்த மாமனார் துலேஸ்வர் தாஸின் மகனுமான சூரஜ் வேலை விஷயமாக வெளியூர் சென்றதால் வீட்டில் இல்லை. அதனால் மருமகள் நிகாரிகா பொறுப்பை சுமந்தார்.

அசாம் மாநிலம் ராஹாவில் உள்ள பாட்டிகவானில் வசித்து வரும் துலேஷ்வர் தாஸுக்கு வயது 75. இவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. வீட்டில் யாரும் இல்லை மருமகள் நிகாரிகா மட்டும்தான் இருந்தார். கொரோனா பாதித்த தன் 75 வயது மாமனாரை தன் முதுகில் சுமந்து இவர் அருகில் இருக்கும் ராஹா மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

இதனையடுத்து மருமகள் நிகாரிகாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

உள்ளூர் அதிகாரிகள் மாமனார் துலேஷ்வர் தாஸை மாவட்ட கோவிட் மருத்துவ மையத்துக்கு அனுப்புமாறு கூறினர், அதே வேளையில் மருமகள் நிகாரிகாவை வீட்டுத் தனிமையில் இருக்குமாறு ஆலோசனை வழங்கினர். ஆனால் மாமனாரை தனியே மருத்துவமனையில் விட மருமகள் நிகாரிகாவுக்கு மனம் வரவில்லை.

பிற்பாடு டாக்டர் சங்கீதா தார் மற்றும் சுகாதாரப் பணியாளர் பின்ட்டு ஹீரா ஆகியோர் இருவருக்கும் முதற்கட்ட சிகிச்சைகளை அளித்து பிறகு 108 ஆம்புலன்ஸில் மாமனார், மருமகள் இருவரையும் கொரோனாவுக்கான அரசு மருத்துவமனையில் அனுமதிக்க ஏற்பாடு செய்தனர்.

தனக்கு கொரோனா வந்தாலும் பரவாயில்லை என்று தன்னலம் பாராமல் மாமனாரை தோளில் சுமந்து சென்று பொறுப்புடன் செயல்பட்ட மருமகள் நிகாரிகாவை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

ஒரு மருமகள் தனக்கும் தொற்றும் என்ற பயமில்லாமலும் சுயநலமில்லாமலும் செயல்பட்டது பெரிய பாராட்டுகளை குவித்து வருகிறது.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் அனைவரும் பயத்துடனும் நம்பிக்கை இல்லாமலும் விரக்தியில் இருக்கும் போது தன் மாமனாருக்காக தன் உடல்நலத்தையும் பாராமல் தன்னலத்தை துறந்து செயல்பட்ட மருமகளை அப்பகுதிவாசிகள் புகழ்ந்து தள்ளுகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories