கொழும்பு: பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை சுற்றுப்பயணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்யும் வகையில், இலங்கைத் தலைநகர் கொழும்புக்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வெள்ளிக்கிழமை வந்து சேர்ந்தார். அவர், இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறீசேனாவை சந்தித்துப் பேசினார். கொழும்பில் இரு நாள்கள் தங்கியிருக்கும் சுஷ்மா ஸ்வராஜ், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா ஆகியோரைச் சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளார்.
கொழும்பு வந்தார் சுஷ்மா ஸ்வராஜ்: மோடி பயணத்துக்கான ஏற்பாடுகளில் கவனம்
Popular Categories



