December 6, 2025, 7:30 AM
23.8 C
Chennai

அறுவை சிகிச்சைக்காக விவசாயி சேர்த்து வைத்த ரூ.2 லட்சம்! எலி கடித்த அவலம்!

rat destroyed rupee notes1 - 2025

அறுவை சிகிச்சைக்காக சேர்த்து வைத்த இரண்டு லட்சத்தை எலி கடித்து விட்டது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மெகபூபாபாத் மாவட்டம் வேம்னூர் எல்லையில் உள்ள இந்திரா நகர் தண்டாவைச் சேர்ந்த ரெட்யா என்பவர் காய்கறி வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்தி வருகிறார்.

கஷ்டப்பட்டு சம்பாதித்தது ஒரு ரூபாய் ஆனாலும் சரி அது காணாமல் போனால் அந்த துயரம் மிகவும் பெரியதாகவே இருக்கும். அப்படி இருக்கையில் வியர்வை சிந்தி உழைத்து சம்பாதித்த இரண்டு லட்சம் ரூபாய்கள் வீணாகிப் போனால் அந்த வேதனையை வர்ணிக்க இயலாது.

பாவம்… ஒரு முதியவரை அப்படிப்பட்ட தரித்திரமே பின்தொடர்ந்தது. மகபூபாபாத் மாவட்டம் வேம்னூர் எல்லையில் இந்திரா நகர் தண்டாவைச் சேர்ந்த ரெட்யா என்பவர் காய்கறி விற்று வாழ்க்கை நடத்தி வந்தார்.

கடந்த 4 ஆண்டுகளாக அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் வயிற்றில் பிரச்சினையாக இருந்தது. மருத்துவமனைக்குச் சென்று டாக்டர்களுக்கு காண்பித்த போது அவருடைய வயிற்றில் கட்டி இருப்பதாகவும் ஹைதராபாத்துக்கு சென்று ஆபரேஷன் செய்து கொள்ளும்படியும் தெரிவித்தனர். சர்ஜரிக்கு சுமார் நான்கு லட்சம் வரை செலவாகும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அத்தனை பணம் அவரிடம் இல்லை. அதனால் தன் செலவுகளை முழுமையாக குறைத்துக் கொண்டு ஒரு ஒரு ரூபாயாக சேர்த்து வருகிறார். வயிற்றில் வலி இருந்தாலும் அந்த வலியை பொறுத்துக் கொண்டே காய்கறி விற்று வருகிறார்.

கடனாக பெற்ற பணம் மற்றும் தன்னிடம் சேர்த்து வைத்த மொத்தம் எல்லாம் சேர்ந்து இரண்டு லட்சத்தை தன் வீட்டில் அலமாரியில் பாதுகாப்பாக வைத்தார்.

ஒரு நாள் வயிற்று வலி மிகவும் அதிகமாக இருந்ததால் மருத்துவமனைக்குச் செல்ல நினைத்தார். தான் சேர்த்து வைத்த பணத்தை எடுத்துச் செல்லலாம் என்று அலமாரியைத் திறந்து பார்த்தால் அதிர்ச்சி காத்திருந்தது. கரன்சி நோட்டுகள் துண்டு துண்டாக கிழிந்து காணப்பட்டன.

எவ்வாறு நடந்திருக்கும் என்று யோசிக்கையில் எலிகள் அலமாரியில் புகுந்து கடித்துள்ளன என்பது புரிந்தது. கிழிந்துபோன நோட்டுத் துண்டுகளை எடுத்துக் கொண்டு கண்ணில் தென்பட்ட ஒவ்வொரு வங்கிக்கும் சென்றார். அந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் ஹைதராபாத்தில் உள்ள ரிசர்வ் வங்கி கிளைக்கு செல்லும்படியும் அதிகாரிகள் கூறினர்.

ஆனால் அங்கு கூட கிழிந்து போன பணத்தை எடுத்துச் எடுத்துக் கொள்வார்களோ இல்லையோ என்று முதியவர் வேதனையில் உள்ளார்.

rat destroyed rupee notes2 - 2025

தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று அரசாங்கத்தை கோரியுள்ளார். வியர்வை சிந்தி உழைத்து சம்பாதித்த பணத்தை எலி கடித்து விட்டதால் கண்ணீரோடு புலம்புகிறார்.

அரசாங்கம் தன் ஆபரேஷனுக்கு உதவ வேண்டும் என்றும் எலி கடித்த நோட்டுகளை எடுத்துக் கொண்டு நல்ல நோட்டு தந்து தன்னை ஆதரிக்கும்படியும் வேண்டிக் கொள்கிறார்.

நாம் ஏதோ ஒன்றுமில்லாத விஷயத்தையெல்லாம் பெரிதாக்கி புலம்புகிறோமே… இவருடைய தூயரத்தைப் பாருங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories