தாம்பத்திய உறவுக்கு சம்மதிக்காத மனைவி! கூலிப்படை வைத்து கொலை செய்த கணவன் !

murder-1
murder-1

தாம்பத்தியத்திற்கு மறுப்பு தெரிவித்த மனைவியை கணவன் கூலிப்படை ஏவி கொலை செய்த பயங்கரம் அரங்கேறியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டம் பிரம்மவார் உப்பினக்கோட்டை பகுதியை சார்ந்தவர் இராமகிருஷ்ணா. இவரது மனைவி விசாலா (வயது 35). இவர்கள் 2 பேரும் துபாயில் வசித்து வந்துள்ளனர்.

இராமகிருஷ்ணனுக்கும் – அவரது உறவினர்களுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்த நிலையில், இதனை சரி செய்ய கடந்த 10 ஆம் தேதி துபாயில் இருந்து இராமகிருஷ்ணா – விசாலா உடுப்பிக்கு வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 12 ஆம் தேதி தான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் விசாலா கொலை செய்யப்பட்டு பிணமாக இருந்துள்ளார்.

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த பிரம்மவார் காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள தொடங்கினர்.

விசாரணையில், விசாலாவை செல்போன், மடிக்கணினி வயரால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனையடுத்து, குற்றவாளிகளை கைது செய்ய 4 தனிப்படைகளை அமைத்த உடுப்பி காவல் துறையினர் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

ALSO READ:  ஐபிஎல் - 2026: கலக்கும் இளம்புயல் சூர்யவன்ஷி

இராமகிருஷ்ணனும் – விசாலாவும் சொத்து பிரச்சனை காரணமாக துபாயில் இருந்து வந்ததால், சொத்து தகராறில் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

விசாரணையில், இராமகிருஷ்ணாவின் நடவடிக்கையில் காவல் துறையினருக்கு சந்தேகம் ஏற்பட, அவரை கைது செய்து விசாரணை செய்கையில் சொந்த மனைவியை கூலிப்படை ஏவி கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த வாக்குமூலத்தில், ” துபாயில் வசித்து வந்த விசாலா – இராமகிருஷ்ணா தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், இராமகிருஷ்ணா தனது மனைவி விசாலாவை அடிக்கடி தாம்பத்தியத்திற்கு அழைத்துள்ளார்.

ஆனால் விசாலா மறுப்பு தெரிவிக்கவே, இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. ஒரு சமயத்திற்கு மேல் கெஞ்சி பார்த்த இராமகிருஷ்ணா மனைவியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

அவரது திட்டப்படி கடந்த 6 மாதங்களுக்கு முன்னதாகவே நண்பர்களுடன் கலந்து ஆலோசனை செய்த நிலையில், உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கூலிப்படையை சார்ந்த நபர்களுக்கு ரூ.2 இலட்சம் முன்பணம் வழங்கப்பட்டு, மனைவி மற்றும் அவர் தங்கியிருக்கும் வீடு தொடர்பான அனைத்து விபரத்தையும் இராமகிருஷ்ணா வழங்கியுள்ளார்.

ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

மேலும், சொத்து தகராறு தொடர்பான விஷயத்தை காரணமாக வைத்து, திட்டமிட்டே மனைவியை உடுப்பிக்கு அழைத்து வந்துள்ளார்.

பணத்தை பெற்றுக்கொண்ட கூலிப்படை கும்பல் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாலாவை கழுத்தை இறுக்கி கொலை செய்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளது.

இராமகிருஷ்ணா கொடுத்த தகவலின் பேரில் கூலிப்படையை சார்ந்த ஷமி நிஷார்த் எனபவனையும் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், வழக்கில் தொடர்புடைய பிறரை தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories