இரவில் ஆட்டோவில் இளம்பெண்… டிரைவரின் எசகுபிசகில் உஷாராகி திஷா ஆப் பட்டனை அழுத்த… ‘நடந்தது என்ன?’

auto telangana - 2026

இரவு ஆட்டோவில் ஏறிய இளம்பெண்… டிரைவரின் நடத்தையில் மாற்றத்தை அறிந்து… திஷா ஆப் பட்டனை அழுத்தினார்… பிறகு என்ன நடந்தது தெரியுமா?

ஆந்திரப் பிரதேச அரசு உயர்ந்த நோக்கத்தோடு தொடங்கிய திஷா ஆப் நெல்லூர் மாவட்டத்தில் இளம்பெண்ணை ஆட்டோ டிரைவரின் தொல்லையிலிருந்து காப்பாற்றியது.

ஆட்டோ டிரைவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் உடனடியாக மொபைலில் உள்ள திஷா ஆப் எஸ்ஓஎஸ் பட்டனை ஆன் செய்ததால் இரண்டே நிமிடங்களில் போலீசார் இளம்பெண்ணின் உதவிக்கு வந்து அவரை பத்திரமாக வீட்டில் சேர்த்தனர்.

இளம்பெண்ணை பாதுகாப்பாக வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்த போலீசாரை குண்டூரு டிஐஜி திருவிக்ரம் வர்மா பாராட்டினார். அவர் மட்டுமின்றி, நெல்லூர் மாவட்ட மக்கள் கூட போலிஸாரின் சேவைகளை பாராட்டினர்.

நெல்லூர் மாவட்டம் தொரவாரி சத்திரம் போலீசார் திஷா ஆப் மூலம் உதவி கோரிய இளம்பெண்ணை பத்திரமாக வீட்டில் சேர்த்தனர். சூலூர்பேட்டை அருகில் உள்ள ஸ்ரீசிட்டியில் பணிபுரிந்து வந்த ஒரு இளம்பெண் சொந்த ஊரான மர்காபுரம் சென்று திரும்பி வரும்போது நாயுடுபேட்டையில் இருந்து சூலூர்பேட்டை செல்வதற்கு இரவு பத்தரை மணிக்கு ஹைவேயில் செல்லும் ஒரு ஆட்டோவில் ஏறினார்.

ஆனால் ஆட்டோ கிளம்பிய சற்று நேரத்திற்கெல்லாம் டிரைவரின் நடத்தையில் மாற்றம் தெரிந்தது. சந்தேகம் வந்ததால் திஷா ஆப்பின் எஸ்ஓஎஸ் பட்டனை ஆன் செய்தார் அந்த இளம்பெண். உடனடியாக போலீசுக்கு செய்தி சென்றது.

இரவு 10.38 மணிக்கு செய்தி கிடைத்தவுடன் 10.40க்கு பாதிக்கப்பட்ட பெண்ணோடு போனில் பேசி தைரியம் கூறினர். தொரவாரிசத்திரம் போலீசார் மற்றும் ஹைவே மொபைல் ஊழியர் 10.42 மணிக்கு இளம்பெண் பயணித்த ஆட்டோவின் அருகில் வந்து அவரைத் தம் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு பாதுகாப்பாக சூலூர்பேட்டை அழைத்துச் சென்று உறவினர்களின் வீட்டில் சேர்த்தனர்.

வெறும் நான்கு நிமிடங்களிலேயே போலிசார் ஹைவேயில் பயணித்துக் கொண்டிருந்த ஆட்டோவின் அருகில் வந்து சேர்ந்து இளம்பெண்ணை பத்திரமாக வீட்டில் சேர்த்தனர்.

திஷா ஆப் உபயோகத்தை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் ஒவ்வொரு இளம்பெண்ணும் திஷா ஆப் டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும் என்றும் குண்டுரு டிஐஜி திரிவிக்ரம் வர்மா குறிப்பிட்டார்.

பெண்கள் யாரும் தைரியத்தை இழக்க வேண்டாம் என்றும் பெண்களுக்கு போலீசார் எப்போதும் துணையாக இருப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

மாநில அரசாங்கமும் திஷா ஆப் பயன்பாடு குறித்து விவரமாக புரிதல் ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு இளம் பெண்ணும் ஒவ்வொரு பெண்மணியும் திஷா ஆப் டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories