இரவில் ஆட்டோவில் இளம்பெண்… டிரைவரின் எசகுபிசகில் உஷாராகி திஷா ஆப் பட்டனை அழுத்த… ‘நடந்தது என்ன?’

auto telangana - 2026

இரவு ஆட்டோவில் ஏறிய இளம்பெண்… டிரைவரின் நடத்தையில் மாற்றத்தை அறிந்து… திஷா ஆப் பட்டனை அழுத்தினார்… பிறகு என்ன நடந்தது தெரியுமா?

ஆந்திரப் பிரதேச அரசு உயர்ந்த நோக்கத்தோடு தொடங்கிய திஷா ஆப் நெல்லூர் மாவட்டத்தில் இளம்பெண்ணை ஆட்டோ டிரைவரின் தொல்லையிலிருந்து காப்பாற்றியது.

ஆட்டோ டிரைவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் உடனடியாக மொபைலில் உள்ள திஷா ஆப் எஸ்ஓஎஸ் பட்டனை ஆன் செய்ததால் இரண்டே நிமிடங்களில் போலீசார் இளம்பெண்ணின் உதவிக்கு வந்து அவரை பத்திரமாக வீட்டில் சேர்த்தனர்.

இளம்பெண்ணை பாதுகாப்பாக வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்த போலீசாரை குண்டூரு டிஐஜி திருவிக்ரம் வர்மா பாராட்டினார். அவர் மட்டுமின்றி, நெல்லூர் மாவட்ட மக்கள் கூட போலிஸாரின் சேவைகளை பாராட்டினர்.

நெல்லூர் மாவட்டம் தொரவாரி சத்திரம் போலீசார் திஷா ஆப் மூலம் உதவி கோரிய இளம்பெண்ணை பத்திரமாக வீட்டில் சேர்த்தனர். சூலூர்பேட்டை அருகில் உள்ள ஸ்ரீசிட்டியில் பணிபுரிந்து வந்த ஒரு இளம்பெண் சொந்த ஊரான மர்காபுரம் சென்று திரும்பி வரும்போது நாயுடுபேட்டையில் இருந்து சூலூர்பேட்டை செல்வதற்கு இரவு பத்தரை மணிக்கு ஹைவேயில் செல்லும் ஒரு ஆட்டோவில் ஏறினார்.

ஆனால் ஆட்டோ கிளம்பிய சற்று நேரத்திற்கெல்லாம் டிரைவரின் நடத்தையில் மாற்றம் தெரிந்தது. சந்தேகம் வந்ததால் திஷா ஆப்பின் எஸ்ஓஎஸ் பட்டனை ஆன் செய்தார் அந்த இளம்பெண். உடனடியாக போலீசுக்கு செய்தி சென்றது.

இரவு 10.38 மணிக்கு செய்தி கிடைத்தவுடன் 10.40க்கு பாதிக்கப்பட்ட பெண்ணோடு போனில் பேசி தைரியம் கூறினர். தொரவாரிசத்திரம் போலீசார் மற்றும் ஹைவே மொபைல் ஊழியர் 10.42 மணிக்கு இளம்பெண் பயணித்த ஆட்டோவின் அருகில் வந்து அவரைத் தம் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு பாதுகாப்பாக சூலூர்பேட்டை அழைத்துச் சென்று உறவினர்களின் வீட்டில் சேர்த்தனர்.

வெறும் நான்கு நிமிடங்களிலேயே போலிசார் ஹைவேயில் பயணித்துக் கொண்டிருந்த ஆட்டோவின் அருகில் வந்து சேர்ந்து இளம்பெண்ணை பத்திரமாக வீட்டில் சேர்த்தனர்.

திஷா ஆப் உபயோகத்தை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் ஒவ்வொரு இளம்பெண்ணும் திஷா ஆப் டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும் என்றும் குண்டுரு டிஐஜி திரிவிக்ரம் வர்மா குறிப்பிட்டார்.

பெண்கள் யாரும் தைரியத்தை இழக்க வேண்டாம் என்றும் பெண்களுக்கு போலீசார் எப்போதும் துணையாக இருப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

மாநில அரசாங்கமும் திஷா ஆப் பயன்பாடு குறித்து விவரமாக புரிதல் ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு இளம் பெண்ணும் ஒவ்வொரு பெண்மணியும் திஷா ஆப் டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories