அயர்லாந்துடனான ஆட்டம்: இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

indianflag ஹாமில்டன்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இன்று ஹாமில்டன் நகரில் நடைபெற்ற 34வது லீக் சுற்றுப் போட்டியில் இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதின. இதில், இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில், அயர்லாந்து டாஸ் வென்று, பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதை அடுத்து களம் இறங்கிய அயர்லாந்து அணியின் துவக்க வீரர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் விக்கெட்டுக்கு 89ரன்கள் சேர்த்தனர். அணியின் துவக்க வீரர் போட்டர்ஃபீல்ட் 67 ரன் எடுத்தார். ஸ்டிர்லிங் 42 ரன் எடுத்தார்.. ஜோஸ் 2 ரன்னில் ஆட்டம் இழந்தபோதும், ஓ பிரைன் நன்றாக விளையாடினார். 75 பந்துகளில் 75 ரன் எடுத்தார். அதில் 3 சிக்ஸர்கள் அடங்கும். பால்ப்ரின் 24 ரன் எடுத்தார். ஆனால் ஆட்டத்தின் திருப்புமுனையை அஸ்வின் ஏற்படுத்தினார். அவர் 2 முக்கிய விக்கெட் எடுத்தார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க அந்த அணி 49 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 259 ரன் எடுத்தது. பின்னர் ஆடத் தொடங்கிய இந்திய அணியில், துவக்கம் மிகச் சிறப்பாக அமைந்தது. ரோஹித் சர்மா வழக்கமான பேட்டிங் செய்து 66 பந்தில் 3 சிக்ஸருடன் 64 ரன் எடுத்தார். ஷிகர் தவான் 85 பந்துகளில் 5 சிக்ஸருடன் 100 ரன் எடுத்து, இந்த உலகக் கோப்பையில் தனது இரண்டாவது சதத்தை எடுத்தார். விராட் கோலி ஆட்டமிழக்காமல் 44 ரன்களும், ரஹானே ஆட்டம் இழக்காமல் 33 ரன்களும் எடுத்து, 36.5 ஓவர்களிலேயே வெற்றிக்குத் தேவையான 260 ரன்களை எடுத்தனர். இதன் மூலம் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடர்ச்சியான வெற்றியைப் பதிவு செய்தது. கடந்த 5 போட்டிகளில் இந்திய அணி, எதிரணியை அனைத்து விக்கெட்களையும் வீழ்த்தி  வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

Topics

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

Entertainment News

Popular Categories