காதலியோடு இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர்கள்! காதலன் தற்கொலை!

dead bady 10
dead bady 10

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமொக்கா பகுதியை சார்ந்தவர் சுப்ரீத் (வயது 32). இவர் ஹாசன் மாவட்டத்தில் உள்ள அரிசிகெரெ செஸ்காம் அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார்.

சுப்ரீத் இளம்பெண்ணை காதலித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக காதல் ஜோடி அங்குள்ள துலே மல்லேஸ்வரா மலைக்கு சென்றுள்ளது.

அங்கு தனிமையில் மறைவான பகுதியில் காதல் ஜோடிகள் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். காதல் ஜோடியின் தனிமையை அங்கு தங்கியிருந்த 4 சிறுவர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர்.

இதன்பின்னர், சுப்ரீத்தை தொடர்பு கொண்டு நீங்கள் தனிமையில் இருக்கும் வீடியோ உள்ளது, அதனை வெளியிடாமல் இருக்க பணம் வேண்டும் என்று கேட்டிருக்கின்றனர்.

இதனால் பயந்துபோன சுப்ரீத் சிறுவர்கள் கேட்கும் சமயமெல்லாம் பணத்தை கொடுத்து வந்துள்ளனர். சிறுவர்கள் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்த நிலையில், பெண்ணை அடைய திட்டமிட்டு அவரின் செல்போன் எண்ணை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த சுப்ரீத் தற்கொலை செய்ய முடிவெடுத்து, பெங்களூரில் உள்ள மெஜஸ்டிக் பகுதியில் தனியார் விடுதியில் தங்க அறையெடுத்து தங்கியுள்ளார்.

அங்கு விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த உப்பார்பேட்டை காவல் துறையினர், சுப்ரீத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் அவர் எழுதி வைத்த கடிதத்தில் மேற்கொண்ட விஷயம் தெரியவரவே, சுப்ரீத்தின் தற்கொலைக்கு காரணமான 4 சிறுவர்களையும் காவல் துறையினர் கைது செய்து பெங்களூருக்கு அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories