நியூஸி.யில் இந்திய ரசிகரை அபராதத்தில் இருந்து காத்த சச்சினின் கடிதம்

sudhir-gowdam புது தில்லி: விமான நிலையத்துக்குள் அனுமதி மறுக்கப்பட்டு, அபராதம் கட்ட வேண்டிய நிலையில் சச்சின் டென்டுல்கரின் கடிதம் ஒன்று, ரசிகர் ஒருவரைக் காப்பாற்றியுள்ளது. இந்தியா விளையாடும் அனைத்துப் போட்டிகளிலும் மூவர்ணக் கொடி வண்ணத்தைப் பூசி கையில் தேசியக்கொடி வைத்து அசைத்து கொண்டிருப்பவர் சுதிர் கௌதம். இந்திய அணிக்கு தனது ஆதரவை வழங்கி உற்சாகப் படுத்துபவர். இவர் சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகரும்கூட. உலகக் கோப்பையை தனது ரசிகரான சுதிர் கவுதம் கையில் கொடுத்து சச்சின் அழகு பார்த்த புகைப்படங்கள் இணையத்தில் பிரபலம். இப்படிப்பட்ட அவருக்கு தற்போது சச்சினின் கடிதம்தான் ஒரு இக்கட்டில் இருந்து அவரைக் காத்துள்ளது. உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் நாடுகளில் ஒன்றான நியூசிலாந்து நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் கண்டிப்பாக குடியேற்ற விதிகளை கடைபிடிக்க வேண்டும் என அந்தநாட்டு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் சுதிர் கௌதம், கடந்த ஞாயிற்றுக் கிழமை ஆக்லாந்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அவர் இந்தியாவின் மூவர்ணக் கொடியை தனது உடலில் வர்ணமாகப் பூசியும், இந்திய வரைபடத்தை தனது தலை அலங்காரமாகவும் செய்துள்ளார். இவரது தோற்றத்தைப் பார்த்த விமான நிலைய அதிகாரிகள் அவருக்கு அனுமதி மறுத்துள்ளனர். மேலும், அவருக்கு விதிமுறைகளை மீறியதற்காக 1400 நியூசிலாந்து டாலர் அபராதம் விதித்துள்ளனர். இது இந்திய மதிப்பில் ரூ.65 ஆயிரம். இதனால் அதிர்ச்சி அடைந்த சுதிர் கௌதம், என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துள்ளார். அப்போது, அவருக்கு சச்சின் டெண்டுல்கர் தனக்கு எழுதிய கடிதம் நினைவுக்கு வந்தது. அதை குடியேற்ற துறை அதிகாரிகளிடம் காட்டி, தான் கிரிக்கெட் ரசிகர்தான் என்றும், அவரது நிலையையும் எடுத்துச் சொல்லியிருக்கிறார். இதை அடுத்து, அவரை நம்பிய அதிகாரிகள், அவரை விமான நிலையத்துக்குள் அனுமதித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

Entertainment News

Popular Categories