ஹோலி கொண்டாட அழைத்து முன்னாள் காதலனை புது காதலனுடன் குத்திக் கொன்ற சிறுமி

murderபுது தில்லி: ஹோலியை மகிழ்ச்சியுடன் கொண்டாடலாம் வா என்று தனது முன்னாள் காதலனை அழைத்தாள் ஒரு 15 வயதுச் சிறுமி. பின்னர் தனது புதிய காதலனுடன் சேர்ந்து அவனை குத்திக் கொன்றாள். அதிர்ச்சிகரமான இந்தச் சம்பவம் தலைநகர் தில்லிக்கு அருகேதான் நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அனைவரும் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது அடுத்த அதிர்ச்சி. வடக்கு தில்லியில் புராரி பகுதியில் நடைபெற்ற இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் கூறியது…. ஜஹாங்கிர்புரி பகுதியில் தனது தாய் வழி தாத்தா பாட்டியுடன் வசித்து வந்தார் 15 வயதுச் சிறுமி. தாத்தா பாட்டி இருவரும் கூலி வேலை செய்பவர்கள். அதே ஜஹாங்கிர்புரி பகுதியில் வசிக்கும் 16 வயது கமல் என்ற சிறுவனுடன் இந்தச் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கமல் அந்தப் பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளான். அவனும் கூலி வேலைக்குச் சென்று வந்தானாம். கமலும் அந்தச் சிறுமியும் காதலித்து வந்தனராம். கமலுடன் ஒன்றாக ஊர் சுற்றி, சில ஆண்டு முன் வரை நட்பாக இருந்த அந்தச் சிறுமி, நட்பு கசந்து வேறு ஒரு 17 வயதுச் சிறுவனுடன் நெருக்கமாகப் பழகத் தொடங்கியுள்ளார். ஆனால், இதை கமல் விரும்பவில்லை. அந்தச் சிறுவனை இதற்காக அடித்து கண்டித்ததுடன், அந்தச் சிறுமியையும் கண்டித்துள்ளான். இதனால், கமல் இல்லாவிட்டால் இருவரும் ஒன்றாக ஊர் சுற்றலாம் என்று சிறுமியும் அந்தப் புதிய நண்பனும் யோசிக்கவே, கமலை கொலை செய்யும் முடிவுக்கு இருவரும் வந்துள்ளனர். இதற்காக திட்டமிட்ட அவர்கள், தன் நண்பர்களின் துணையை நாடியுள்ளனர். இதை அடுத்து, ஹோலி விளையாடலாம் வா என்று புராரி பகுதிக்கு கமலை அழைத்துள்ளார் அந்தச் சிறுமி. அங்கு வண்ணப் பொடிகளைத் தூவி, ஹோலி கொண்டாட ஏற்பாடு செய்துள்ளனர். சிறுவன் கமல் சனிக்கிழமை அன்று அங்குச் சென்றுள்ளான். அப்போது, சிறுமியும், அவளின் புதிய காதலன் மற்றும் அவனது நண்பர்கள் 4பேரும் சேர்ந்து, கமலை கத்தியால் குத்திக் கொன்றுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து அறிந்த போலீசார், குற்றவாளிகள் ஆறு பேரையும் கைது செய்துள்ளனர். அவர்களில் 4 பேர் 20 வயதில் இருப்பவர்கள். அவர்களின் பெயர்கள் கௌதம், கெஸ்டோ, கோவிந்தா, நவீன் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். தலைநகர் தில்லி பகுதியில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories