ஹோலி கொண்டாட அழைத்து முன்னாள் காதலனை புது காதலனுடன் குத்திக் கொன்ற சிறுமி

murderபுது தில்லி: ஹோலியை மகிழ்ச்சியுடன் கொண்டாடலாம் வா என்று தனது முன்னாள் காதலனை அழைத்தாள் ஒரு 15 வயதுச் சிறுமி. பின்னர் தனது புதிய காதலனுடன் சேர்ந்து அவனை குத்திக் கொன்றாள். அதிர்ச்சிகரமான இந்தச் சம்பவம் தலைநகர் தில்லிக்கு அருகேதான் நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அனைவரும் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது அடுத்த அதிர்ச்சி. வடக்கு தில்லியில் புராரி பகுதியில் நடைபெற்ற இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் கூறியது…. ஜஹாங்கிர்புரி பகுதியில் தனது தாய் வழி தாத்தா பாட்டியுடன் வசித்து வந்தார் 15 வயதுச் சிறுமி. தாத்தா பாட்டி இருவரும் கூலி வேலை செய்பவர்கள். அதே ஜஹாங்கிர்புரி பகுதியில் வசிக்கும் 16 வயது கமல் என்ற சிறுவனுடன் இந்தச் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கமல் அந்தப் பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளான். அவனும் கூலி வேலைக்குச் சென்று வந்தானாம். கமலும் அந்தச் சிறுமியும் காதலித்து வந்தனராம். கமலுடன் ஒன்றாக ஊர் சுற்றி, சில ஆண்டு முன் வரை நட்பாக இருந்த அந்தச் சிறுமி, நட்பு கசந்து வேறு ஒரு 17 வயதுச் சிறுவனுடன் நெருக்கமாகப் பழகத் தொடங்கியுள்ளார். ஆனால், இதை கமல் விரும்பவில்லை. அந்தச் சிறுவனை இதற்காக அடித்து கண்டித்ததுடன், அந்தச் சிறுமியையும் கண்டித்துள்ளான். இதனால், கமல் இல்லாவிட்டால் இருவரும் ஒன்றாக ஊர் சுற்றலாம் என்று சிறுமியும் அந்தப் புதிய நண்பனும் யோசிக்கவே, கமலை கொலை செய்யும் முடிவுக்கு இருவரும் வந்துள்ளனர். இதற்காக திட்டமிட்ட அவர்கள், தன் நண்பர்களின் துணையை நாடியுள்ளனர். இதை அடுத்து, ஹோலி விளையாடலாம் வா என்று புராரி பகுதிக்கு கமலை அழைத்துள்ளார் அந்தச் சிறுமி. அங்கு வண்ணப் பொடிகளைத் தூவி, ஹோலி கொண்டாட ஏற்பாடு செய்துள்ளனர். சிறுவன் கமல் சனிக்கிழமை அன்று அங்குச் சென்றுள்ளான். அப்போது, சிறுமியும், அவளின் புதிய காதலன் மற்றும் அவனது நண்பர்கள் 4பேரும் சேர்ந்து, கமலை கத்தியால் குத்திக் கொன்றுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து அறிந்த போலீசார், குற்றவாளிகள் ஆறு பேரையும் கைது செய்துள்ளனர். அவர்களில் 4 பேர் 20 வயதில் இருப்பவர்கள். அவர்களின் பெயர்கள் கௌதம், கெஸ்டோ, கோவிந்தா, நவீன் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். தலைநகர் தில்லி பகுதியில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

தென்காசி மாவட்ட U-16 கூடைபந்தாட்ட வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் தேர்வு!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா...

திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை – வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் திமுக வேட்பாளர் வீட்டில் 122 சவரன் கொள்ளையடிக்கப்பட்ட...

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

யானைகளின் அணிவகுப்பு.. இலஞ்சித்தார மேளம்.. திருச்சூர் பூரம் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

37 ஆண்டுகளுக்கு முன்பு நான் வந்தது போலவே, நீங்களும் பணமின்றி, ஆனால் பாரதத்தின் நல்ல கல்வி மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் அமெரிக்காவிற்கு வந்தீர்கள்.

ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

பெண்கள் தங்களுக்காக போராட முடியாதவர்கள் என்றல்ல. அவர்கள் கடந்த மூன்று தசாப்தங்களாக போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அவையில் 85 சதவீதத்தினர் ஆண்களாக இருப்பதால் அவர்களின் யாராவது கதவைத் திறந்து வழிவிட வேண்டும்.

Entertainment News

Popular Categories