ஹோலி கொண்டாட அழைத்து முன்னாள் காதலனை புது காதலனுடன் குத்திக் கொன்ற சிறுமி

murderபுது தில்லி: ஹோலியை மகிழ்ச்சியுடன் கொண்டாடலாம் வா என்று தனது முன்னாள் காதலனை அழைத்தாள் ஒரு 15 வயதுச் சிறுமி. பின்னர் தனது புதிய காதலனுடன் சேர்ந்து அவனை குத்திக் கொன்றாள். அதிர்ச்சிகரமான இந்தச் சம்பவம் தலைநகர் தில்லிக்கு அருகேதான் நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அனைவரும் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது அடுத்த அதிர்ச்சி. வடக்கு தில்லியில் புராரி பகுதியில் நடைபெற்ற இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் கூறியது…. ஜஹாங்கிர்புரி பகுதியில் தனது தாய் வழி தாத்தா பாட்டியுடன் வசித்து வந்தார் 15 வயதுச் சிறுமி. தாத்தா பாட்டி இருவரும் கூலி வேலை செய்பவர்கள். அதே ஜஹாங்கிர்புரி பகுதியில் வசிக்கும் 16 வயது கமல் என்ற சிறுவனுடன் இந்தச் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. கமல் அந்தப் பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளான். அவனும் கூலி வேலைக்குச் சென்று வந்தானாம். கமலும் அந்தச் சிறுமியும் காதலித்து வந்தனராம். கமலுடன் ஒன்றாக ஊர் சுற்றி, சில ஆண்டு முன் வரை நட்பாக இருந்த அந்தச் சிறுமி, நட்பு கசந்து வேறு ஒரு 17 வயதுச் சிறுவனுடன் நெருக்கமாகப் பழகத் தொடங்கியுள்ளார். ஆனால், இதை கமல் விரும்பவில்லை. அந்தச் சிறுவனை இதற்காக அடித்து கண்டித்ததுடன், அந்தச் சிறுமியையும் கண்டித்துள்ளான். இதனால், கமல் இல்லாவிட்டால் இருவரும் ஒன்றாக ஊர் சுற்றலாம் என்று சிறுமியும் அந்தப் புதிய நண்பனும் யோசிக்கவே, கமலை கொலை செய்யும் முடிவுக்கு இருவரும் வந்துள்ளனர். இதற்காக திட்டமிட்ட அவர்கள், தன் நண்பர்களின் துணையை நாடியுள்ளனர். இதை அடுத்து, ஹோலி விளையாடலாம் வா என்று புராரி பகுதிக்கு கமலை அழைத்துள்ளார் அந்தச் சிறுமி. அங்கு வண்ணப் பொடிகளைத் தூவி, ஹோலி கொண்டாட ஏற்பாடு செய்துள்ளனர். சிறுவன் கமல் சனிக்கிழமை அன்று அங்குச் சென்றுள்ளான். அப்போது, சிறுமியும், அவளின் புதிய காதலன் மற்றும் அவனது நண்பர்கள் 4பேரும் சேர்ந்து, கமலை கத்தியால் குத்திக் கொன்றுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து அறிந்த போலீசார், குற்றவாளிகள் ஆறு பேரையும் கைது செய்துள்ளனர். அவர்களில் 4 பேர் 20 வயதில் இருப்பவர்கள். அவர்களின் பெயர்கள் கௌதம், கெஸ்டோ, கோவிந்தா, நவீன் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர். தலைநகர் தில்லி பகுதியில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

Topics

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

Entertainment News

Popular Categories