கோழிக்கோடு: கேரள மாநிலம் கோழிக்கோடைச் சேர்ந்த இளைஞர், தன் நிச்சயதார்த்த போட்டோவை பேஸ்புக்கில் போட்டார். அதைப் பார்த்த அவரின் முன்னாள் காதலி, அவர் மீது பாலியல் பலாத்கார புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து அந்த இளைஞரைப் போலீசார் கைது செய்தனர். கோழிக்கோடு மாவட்டம் கூராசுண்டு பகுதியைச் சேர்ந்த 29 வயது இளைஞர் ஷமீருக்கு அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது நண்பர்கள் பார்ப்பதற்காக பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தார் ஷமீர். பேஸ்புக்கில் ஷமீரின் புகைப்படங்களைப் பார்த்த அதே பகுதியைச் சேர்ந்த அவரது முன்னாள் காதலி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் இத்னைக் குறிப்பிட்டு, போலீஸாரிடம் ஷமீர் மீது பாலியல் புகார் அளித்தார். அந்தப் புகாரில், ‘ஷமீர் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்தார். பல்வேறு இடங்களுக்கு நாங்கள் இருவரும் சேர்ந்து சுற்றித் திரிந்தோம். அவர் என்னை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இப்போது அவர் என்னை ஏமாற்றி விட்டார்’ என குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகாரின் பேரில் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 376-ன் படி பாலியல் பலாத்கார வழக்குப் பதிவு செய்த போலீசார், ஷமீரைக் கைது செய்து 14 நாள் நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்
To Read this news article in other Bharathiya Languages
நிச்சயதார்த்த போட்டோவை பேஸ்புக்கில் போட்டவர்: முன்னாள் காதலி கொடுத்த பாலியல் புகாரில் கைது
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari