December 5, 2025, 6:46 PM
26.7 C
Chennai

மோடி, யோகி குறித்து அநாகரிகப் பேச்சு… அசாதுதீன் ஓவைசி மீது உ.பி. போலீஸ் வழக்குப் பதிவு!

Asaduddin Owaisi
Asaduddin Owaisi

உத்தரப்பிரதேச மாநிலம் பார்பங்கி மாவட்டத்தில் “ஆத்திரமூட்டும்” பேச்சு மூலம் வகுப்புவாதத்தைத் தூண்டி, சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்க முயன்றதாக அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தாத்-உல்-முஸ்லிமீன் (AIMIM) தலைவர் அசாதுதீன் ஓவைசி மீது வியாழக்கிழமை உ.பி. போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

அவர் தனது பேச்சில், இந்த ஆண்டு தொடக்கத்தில் மாநில நிர்வாகம் ஒரு நூற்றாண்டு பழமையான மசூதியை “தியாகம்” செய்ததாக அவர் கூறினார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து, அநாகரிகமாக, அசிங்கமாக, அறுவறுக்கத்தக்க வகையில் அவதூறாகப் பேசியதாக போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

எஸ்பி -பாரபங்கி யமுனா பிரசாத், ஓவைசி மீது இந்திய தண்டனைச் சட்டம் 153 ஏ, 188, 169 மற்றும் 170 ஆகியவற்றுடன் கோவிட் -19 நெறிமுறையை மீறியதற்காக தொற்றுநோய் நோய் சட்டத்தில் தொடர்புடைய பிரிவுகளிலும், கூட்டத்திற்கான நிபந்தனைகளை மீறிய பதிவுகளிலும் வழக்குப் பதிவு செய்தனர்.

பாரபங்கியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஓவைசி, மே மாதம் நிர்வாகத்தால் இடிக்கப்பட்ட ராம்சனேஹிகாட்டில் உள்ள மசூதி இடிக்கப் பட்டதைக் குறிப்பிட்டார். மசூதி இடிப்பில் சட்டத்தை பின்பற்றவில்லை என்று நிர்வாகத்தை குற்றம் சாட்டினார். இந்தச் சம்பவத்திற்கு எதிராக பேசாத எதிர்க்கட்சிகளைத் தாக்கினார். இதை “அரசியல் இடிப்பு” என்று குறிப்பிட்ட அவர், பிரதமர், மாநில முதல்வர் குறித்து அறுவறுக்கத் தக்க வகையில் கருத்துகளைத் தெரிவித்தார்.

yogi adityanath
yogi adityanath

ராம்சனேஹி காட் தாலுகா சப் டிவிஷனல் மேஜிஸ்திரேட் குடியிருப்பு வளாகத்தின் எதிரே, சட்டவிரோத குடியிருப்புத் தொகுப்பு இருப்பதாகக் குறிப்பிட்டு, எந்த வித மசூதி குறித்த குறிப்பும் இல்லாமல், அந்த சட்டவிரோத ஆக்கிரமிப்பு இடத்தை அகற்ற நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் ஓவைசி, தனது பேச்சில் அங்கே நூறாண்டு பழைமையான மசூதி என்று குறிப்பிட்டு, ஒரு பிரிவினரின் மனதில் நஞ்சை விதைத்து சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியும் நல்லிணக்கத்தை குலைத்தும் தூண்டிவிட்டார் என்று எஸ்பி., பிரசாத் கூறினார்.

மேலும், அசாதுதீன் ஓவைசி பங்கேற்ற அந்தக் கூட்டத்தில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படவில்லை. முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் ஏராளமான மக்கள் அங்கு திரண்டனர். கொரோனா விதிமுறைகளை மீறி கூட்டம் நடத்தியதுடன், சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து அவதூறாகப் பேசினார்.

இது குறித்து அவர் மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பாரபங்கி நகர போலீசார், ஓவைசி மீது வழக்குப்பதிவு செய்ததாகக் கூறப் படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories