தில்லியில் தரையிறங்கிய ஓமன் நாட்டு விமானத்தின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 150 பயணிகளும் உயிர் தப்பினர். ஓமன் தலைநகர் மஸ்கட்டிலிருந்து நள்ளிரவு 1.43க்கு கிளம்பிய டபிள்யூ. ஐ. 241 என்ற அந்த விமானம், இன்று காலை 6.10க்கு தில்லி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. விமானத்தை அதன் விமானி பாதுகாப்பாக தரையிறக்கிய போது, அதன் முன் டயர்கள் இரண்டும் திடீரென வெடித்தன. அந்த விமானம் தரையில் பாதுகாப்பாக லேண்டிங் ஆனதும் இந்த விபத்து ஏற்பட்டதால், அதில் பயணம் செய்த 150 பயணிகளும் எவ்வித ஆபத்துமின்றி தப்பினர். விமான டயர் வெடித்ததற்கான காரணம் குறித்து தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.
தில்லியில் விமான டயர் வெடித்து விபத்து: 150 பயணிகள் பத்திரம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

