டி20: முதல் போட்டியில் இந்தியா வெற்றி!

t20 nz vs ind
t20 nz vs ind

இந்தியா-நியூசிலாந்து முதல் டி20
ஜெய்ப்பூர் – இந்தியா வெற்றி

முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 ஆட்டம் இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் புதனன்று நடைபெற்றது. இந்திய அணியில் கோலி, ஜதேஜா, பாண்டியா ஆகியோர் ஆடவில்லை. நியூசிலாந்து அணியில் கான்வே காயம் காரணமாக ஆடவில்லை; அணித்தலைவர் வில்லியம்சன் முழங்கை காயம் காரணமாக ஓய்வு எடுத்துக்கொண்டார்; நீஷம், சோதி, மில்னே ஆகியோரும் டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்காக ஓய்வு எடுத்தனர்.

இருந்தாலும் இரண்டு அணிகளும் விறுவிறுப்பான ஆட்டம் ஒன்றை ஆடின. டரில் மிட்சல் நியூசிலாந்து அணியின் ஒரு மித-வேக பந்துவீச்சாளர். அவர் தொடக்க மட்டையாளராக ஆடினார். வெங்கடேஷ் ஐயர் ஒரு தொடக்க ஆட்டக்காரர்; மித-வேக பந்துவீச்சாளரும்கூட. ஆனால் அவர் தொடக்க வீரராக இறங்கவில்லை; பந்தும் வீசவில்லை.

ஆனால் ஒரு நகை முரணாக 20ஆவது ஓவரை வீச மிட்சல் அழைக்கப்பட்டார். தனது டி20 வாழ்க்கையின் முதல் பந்தைச் சந்திக்க வெங்கடேஷ் ஐயர் தயாராக இருந்தார். ஆறு பந்துகளில் 10 ரன் அடிக்க வேண்டிய நிலை. முதல் பந்து வைட். வெங்கடேஷ் ஐயர் சரியாக வீசப்பட்ட முதல் பந்தில் ஃபோர் அடித்தார்; இரண்டாவது பந்தில் அவுட்டானார். 10 ரன்னையும் அடித்திருந்தால் வெங்கடேஷ் பிரபலமடைந்திருப்பார். மிட்சலாவது பிரபலமடைந்தாரா என்றால், அதுவும் இல்லை.

மூன்றாவது பந்தில் இரண்டு வைட் போட்டார் மிட்சல். ஆகவே ஏழு ரன் எடுத்தாயிற்று. மீதம் மூன்று பந்துகளில் மூன்று ரன் தேவை. அதுவரை பெரிய ஷாட் எதுவும் அடிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த ரிஷப் பந்த் ஒரு ஃபோர் அடித்து இந்திய அணியன் டென்ஷனைத் தீர்த்தார். ஆக மிட்சலும் பிரபலமடையவில்லை.

ALSO READ:  T20 WC 2026: வெற்றிக் கோப்பையும்; விறுவிறுப்பு நிமிடங்களும்!

என்ன ஒரு கேம்? மற்றபடி நியுசிலாந்து முதலில் ஆடி, இருபது ஓவரில் ஆறு விக்கட் இழப்பிற்கு 164 ரன் எடுத்தது. கப்தில் 70 ரன், சாப்மென் 63 ரன், அஷ்வின் ஒரு ஓவரில் இரண்டு விக்கட் எடுத்தார். புவனேஷ்குமார் இரண்டு விக்கட் எடுத்தார். பதிலுக்கு இந்திய அணி 19.4 ஓவரில் ஐந்து விக்கட் இழப்பிற்கு 166.

ரோஹித் ஷர்மா 48 ரன், சூர்யகுமார் யாதவ் 62 ரன். முகம்மது சிராஜ் கடைசி ஓவர் வீசும்போது கையில் காயம் பட்டுக்கொண்டார். அதற்கு மேல் பந்து வீச மாட்டார் என நினைத்தபோது அவர் ஓவரை முழுவதுமாக வீசி ஒரு விக்கட்டையும் எடுத்தார்.

அடுத்த டி20 ஆட்டம் வெள்ளியன்று ராஞ்சியில் நடைபெறும். இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories