ரயில் முன்பு டிக் டாக் வீடியோ! இளைஞரின் செயலால் நடந்த விபரீதம்!

train 1
train 1

ரயிலுக்கு அருகே வீடியோ எடுக்க முயன்ற இளைஞர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

செல்ஃபி மோகத்தாலும் டிக் டாக் போன்ற ஆப்களுக்கு வீடியோ எடுக்கும் ஆர்வத்தாலும் பல உயிர்கள் காவு வாங்கப்படுகின்றன.

அப்படியான ஒரு சம்பவம் தற்போது மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. சஞ்சு என்ற 22 வயதான இளைஞர் இட்டார்சி – நாக்பூர் ரயில்வே ட்ராக்கில் தன் நண்பருடன் சென்றுள்ளார். அப்போது அந்த ட்ராக் வழியாக சரக்கு ரயில் வந்துள்ளது.

அந்த ரயிலை வைத்து ரீல்ஸ் வீடியோ எடுக்க நினைத்த சஞ்சு தன் நண்பரிடம் செல்போனை கொடுத்துவிட்டு ரயில்வே ட்ராக்கின் மிக அருகிலேயே நின்று போஸ் கொடுத்துள்ளார்.

பொதுவாக ரயிலானது ட்ராக்கில் செல்லும் போது தண்டாவளத்தின் பக்கவாட்டின் இரு புறத்திலும் சில அடிகளை கவர் செய்தே செல்லும்.

இது தெரியாமல் ட்ராக்கின் அருகிலேயே நின்ற இளைஞர் மீது சரக்கு ரயில் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட இளைஞர் படுகாயமடைந்தார்.

உடனடியாக இளைஞரை மருத்துவமனையில் சேர்க்க முயற்சி செய்துள்ளனர். அதற்குள் படுகாயம் அடைந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

விபத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக, இளைஞரைக் கண்டதும் சரக்கு ரயில் ஓட்டுநர் தொடர்ந்து ஒலி எழுப்பி இளைஞரை எச்சரிக்கை செய்துள்ளார்.

ஆனால் அதனை பொருட்படுத்தாமல் இளைஞர் வீடியோவில் ஆர்வமாக இருந்த நிலையில் விபத்து நடந்துள்ளது

ரயில்வே பாதைகளில் மிகக் கவனமுடன் கடக்க வேண்டுமென தொடர்ந்து எச்சரிக்கை கொடுக்கும் நிலையில் வேண்டுமென்றே ரயில் அருகே நின்று வீடியோ எடுத்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

#MadhyaPradesh: #Man #posing for video dies after being hit by #train #selfie #viral #Viralvdoz #viralvideo pic.twitter.com/dXJMfgXi7y— ViralVdoz (@viralvdoz) November 22, 2021

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

Entertainment News

Popular Categories