சாதுக்களின் கோரிக்கை ஏற்பு: காவி சீருடையை மாற்றிய ரயில்வே!

ramayana express dress
ramayana express dress

மத்திய பிரதேசத்தில் ராமாயண் விரைவு ரயில் பணியாளர்களின் காவி சீருடைக்கு சாதுக்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டது. காவி புனிதமானது என்றும், அது சாதுக்களின் அடையாளன் என்றும், எனவே ரயில்வே உடனடியாக அந்த சீருடையை மாற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்த நிலையில், ராமாயண் எக்பிரஸ் பணியாளர்களின் சீருடை மாற்றப்பட்டுள்ளதாக இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.

கடந்த 7ஆம் தேதி தில்லியில் இருந்து புறப்பட்ட ராமாயண் விரைவு ரயிலில் உள்ள பணியாளர்களுக்கு காவி வண்ணத்தில் சீருடை வழங்கப்பட்டது. ஹிந்து மதத்தின் மதிப்புமிகு புருஷராகப் போற்றப்படும் ஸ்ரீராமன் பயணித்த இடங்களுக்கு இந்த ராமாயண விரைவு ரயில் செல்கிறது. அயோத்தி, நாசிக், ராமேஸ்வரம் உட்பட ராமாயணத்துடன் தொடர்புள்ள 15 புனித தலங்களுக்கு இந்த ரயில் செல்கிறது. ஹிந்து மதத்தைக் குறிக்கும் வகையில், இந்த ரயிலின் பணியாளர்களுக்கு மட்டும், பாரம்பரிய வடிவமைப்புடன் கூடிய காவி நிற சீருடை அளிக்கப் பட்டது.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

ஆனால் இந்த ரயிலில் பணியாளர்களுக்கு காவி சீருடை அளிக்கப் பட்டது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காவி உடை என்பது சாதுக்கள் அணிவது, சன்யாச ஆச்ரமத்தை கடைபிடிக்கும் சாதுக்கள், முனிவர்கள் அணிவது மரபு என்றும், மற்றவர்கள் காவி உடை அணியக் கூடாது என்றும் கூறி, பலரும் தங்களது வருத்தத்தை இந்தியன் ரயில்வேயிடம் பதிவு செய்தனர்.

ramayana express dress1
ramayana express dress1

குறிப்பாக, ரயில்வே பணியாளருக்கு காவி உடை அளிப்பது, ஹிந்து மதத்தையும், சாதுக்களையும் இழிவுபடுத்தும் செயல் என மபி.,யில் உள்ள உஜ்ஜைனி அகடா பரிஷத்தின் முன்னாள் பொதுச் செயலர் அவதேஷ்புரி கூறியிருந்தார். காவி சீருடையை மாற்றக் கோரி ரயில்வே அமைச்சருக்கு கடிதமும் எழுதினார்.

இந்நிலையில் சாதுக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர்களின் கோரிக்கையை ஏற்று, பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட காவிச் சீருடை உடனே மாற்றப்படுவதாக இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Entertainment News

Popular Categories