சாதுக்களின் கோரிக்கை ஏற்பு: காவி சீருடையை மாற்றிய ரயில்வே!

ramayana express dress
ramayana express dress

மத்திய பிரதேசத்தில் ராமாயண் விரைவு ரயில் பணியாளர்களின் காவி சீருடைக்கு சாதுக்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டது. காவி புனிதமானது என்றும், அது சாதுக்களின் அடையாளன் என்றும், எனவே ரயில்வே உடனடியாக அந்த சீருடையை மாற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்த நிலையில், ராமாயண் எக்பிரஸ் பணியாளர்களின் சீருடை மாற்றப்பட்டுள்ளதாக இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.

கடந்த 7ஆம் தேதி தில்லியில் இருந்து புறப்பட்ட ராமாயண் விரைவு ரயிலில் உள்ள பணியாளர்களுக்கு காவி வண்ணத்தில் சீருடை வழங்கப்பட்டது. ஹிந்து மதத்தின் மதிப்புமிகு புருஷராகப் போற்றப்படும் ஸ்ரீராமன் பயணித்த இடங்களுக்கு இந்த ராமாயண விரைவு ரயில் செல்கிறது. அயோத்தி, நாசிக், ராமேஸ்வரம் உட்பட ராமாயணத்துடன் தொடர்புள்ள 15 புனித தலங்களுக்கு இந்த ரயில் செல்கிறது. ஹிந்து மதத்தைக் குறிக்கும் வகையில், இந்த ரயிலின் பணியாளர்களுக்கு மட்டும், பாரம்பரிய வடிவமைப்புடன் கூடிய காவி நிற சீருடை அளிக்கப் பட்டது.

ஆனால் இந்த ரயிலில் பணியாளர்களுக்கு காவி சீருடை அளிக்கப் பட்டது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காவி உடை என்பது சாதுக்கள் அணிவது, சன்யாச ஆச்ரமத்தை கடைபிடிக்கும் சாதுக்கள், முனிவர்கள் அணிவது மரபு என்றும், மற்றவர்கள் காவி உடை அணியக் கூடாது என்றும் கூறி, பலரும் தங்களது வருத்தத்தை இந்தியன் ரயில்வேயிடம் பதிவு செய்தனர்.

ramayana express dress1
ramayana express dress1

குறிப்பாக, ரயில்வே பணியாளருக்கு காவி உடை அளிப்பது, ஹிந்து மதத்தையும், சாதுக்களையும் இழிவுபடுத்தும் செயல் என மபி.,யில் உள்ள உஜ்ஜைனி அகடா பரிஷத்தின் முன்னாள் பொதுச் செயலர் அவதேஷ்புரி கூறியிருந்தார். காவி சீருடையை மாற்றக் கோரி ரயில்வே அமைச்சருக்கு கடிதமும் எழுதினார்.

இந்நிலையில் சாதுக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர்களின் கோரிக்கையை ஏற்று, பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட காவிச் சீருடை உடனே மாற்றப்படுவதாக இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Topics

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Entertainment News

Popular Categories