அதிகாரி வீட்டு தண்ணீர் பைப்பிலிருந்து கொட்டிய பணமழை! லஞ்ச் ஒழிப்புத் துறையினர் அதிர்ச்சி!

Karnataka 1
Karnataka 1

கர்நாடகாவில் பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர், சட்டவிரோதமாக சம்பாரித்த பணத்தை, கழிவுநீர் குழாயில் மறைத்து வைத்திருந்த சம்பவம் ஊழல் தடுப்பு அதிகாரிகளுக்கு திகைப்பையூட்டியுள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக ஊழல் தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், மாநிலம் முழுவதும் 15 அதிகாரிகளைக் குறி வைத்து 68 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் நகைகள், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

விவசாயத்துறை இணை ஆணையர் ருத்ரேஷ் அப்பா வீட்டில் மட்டும் மூன்றரை கோடி மதிப்புள்ள 9 கிலோ தங்கம், 15 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 100 கோடிக்கு மேல் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Karnataka 2
Karnataka 2

இந்த நிலையில், பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வந்தாலும், கலபுரகி பகுதியில் பொதுப்பணித்துறை அதிகாரி சாந்தப்பா கவுடா வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அவரது வீட்டில் அமைக்கப்பட்டிருந்த டம்மி குழாயில் கட்டு கட்டாக பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சரியாகக் கண்டுபிடித்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், பிளம்பர் உதவியுடன் குழாயிலிருந்து பணத்தைக் கைப்பற்றினர்.

அந்த சின்ன குழாயில் இருந்து கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுக்கள் கொட்டியதைக் கண்டு அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் மிக வேகமாகப் பரவி வருகிறது.

Karnataka
Karnataka

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பைப்பில் மொத்தம் 13.5 லட்சம் பணத்தை பதுக்கி வைத்து இருந்துள்ளார்.

அதோடு வீட்டின் மேற்கூரையில் 15 லட்சம் பணத்தை பதுக்கியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அளவுக்கு டெக்னிக்கலாக பணத்தை பதுக்கி வைத்திருந்த இன்ஜினியரிங் தொழில்நுட்ப அறிவைப் பார்த்து அங்கிருந்தவர்கள் ஆடிப் போயுள்ளனர்.

அவரது வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் நகை உள்ளிட்ட பொருட்களின் விபரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், சாந்தப்பா கவுடாவின் வங்கிக் கணக்கும் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Entertainment News

Popular Categories