முதல் டெஸ்ட்: நன்றாகவே விளையாடியது இந்தியா!

ind vs nz
ind vs nz

இந்தியா நியூசிலாந்து முதல் டெஸ்ட் கான்பூர்
முதல்நால் ஆட்டம்
~ முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ~

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று கான்பூரில் தொடங்கியது. இந்தப் போட்டியில் விடாட் கோலி, ரோஹித் ஷர்மா, பும்ரா ஆகியோர் ஆடவில்லை. கே.எல். இராகுல் காயம் காரணமாக ஆட்டத்திலிருந்து விலகிவிட்டார்.

ரஹானே அணித்தலைவர், புஜாரா அணியின் துணைத்தலைவர்; அஷ்வின், ஜதேஜா இருவரும் சுழல்பந்து வீச்சாளராகத் தேர்வாகி விட்டார்கள்; மூன்று சுழல் பந்து வீச்சாளர்கள் என முடிவானதால் அக்சர் படேல் அணிக்குள் வந்துவிட்டார்.

வேகப்பந்து வீச்சாளர்களாக இஷந்தும் உமேஷும் தேர்வாகினர். மீதமுள்ள நாங்கு வீரர்களில் இருவர் தொடக்க ஆட்டக்காரர்கள்; மயங்க் அகர்வாலும், ஷுப்மன் கில்லும் தேர்வாகினர். விக்கட் கீப்பர் விருத்திமான் சாஹா. ஆகவே பதினோராவது ஆட்டக்காரர், ஒரு பேட்டராக இருக்கவேண்டும். அது சூர்யகுமார் யாதவ்வா, ஷ்ரேயாஸ் ஐயரா என்பதில் ஷ்ரேயாஸ் என முடிவானது. அவர் இன்று முதல் முறையாக விளையாடுகிறார்.

பூவாதலையா வென்று இந்திய அணி மட்டையாடத் தீர்மானித்தது. டெஸ்ட் போட்டியில் ஒரு நாளில் 90 ஓவர் விளையாட வேண்டும். குறைந்த பட்சம் பேட்டிங் செய்யும் அணி 275 ரன் எடுக்க வேண்டும். எடுத்தால் அவர்கள் நன்றாக விளையாடியிருக்கிறார்கள் எனக் கொள்ளலாம். இந்திய அணி 84 ஓவர் விளையாடி நாலு விக்கட் இழப்பிற்கு 258 ரன் எடுத்திருக்கிறார்கள். இது அவர்கள் நன்றாக விளையாடியிருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

மாயங்க் அகர்வால் எட்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 28 பந்துகளில் 13 ரன் எடுத்தார். ஷுப்மன் கில் 30 ஓவர்கள் ஆடினார். அவர் 93 பந்துகளைச் சந்தித்து 52 ரன்கள் எடுத்தார். புஜாரா 30 ஓவர்கள் விளையாடி 26 ரன் எடுத்தார். ரஹானே 19 ஓவர்கள் விளையாடி 35 ரன் எடுத்தார். 38ஆவது ஓவரில் விளையாட வந்த ஷ்ரேயாஸ் ஐயரும் 50 ஓவரில் விளையாட வந்த ரவீந்தர் ஜதேஜாவும் ஆட்டமிழக்காமல் ஆடிவருகின்றனர்.

இன்று ஆட்டநேர இறுதியில் ஷ்ரேயாஸ் 75 ரன்னுடனும் ஜதேஜா 50 ரன்னுடனும் ஆடிக்கொண்டிருக்கின்றனர். இந்த ஜோடி ஐந்தாவது விக்கட்டுக்கு இதுவரை 113 ரன் சேர்த்துள்ளனர். நியூசிலாந்து அணியின் ஜமீசன் மூன்று விக்கட்டுகள் எடுத்துள்ளார்.

நாளை இரண்டாம் நாள் ஆட்டம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை வட்டார ஆலயங்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

மாவட்டத்தில் உள்ள கோயில்களில், மார்ச்..6..ம் தேதி வெள்ளிக்கிழமை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி! எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

வரும் ஞாயிறு மார்ச் 1 பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்நாட்டில்...

‘3 முறை முதல்வர்’ ஓ.பன்னீர்செல்வம், ‘குடும்பக் கட்சி’ திமுக.,வில் இணைந்தார்!

மதிமுகவினர் திரும்பவும் திமுகவுக்கு வந்தபோது கருணாநிதி சொன்னார். "மதிமுக என்பதற்கு அர்த்தம் "மறுபடியும் திமுக" என்பதுதான்" இப்ப... அதிமுகவுக்கு அர்த்தம்  “அவங்களும் திமுகதான்”

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

T20 WC 2026: விறுவிறுப்பான கட்டத்தில் சூப்பர் 8 போட்டிகள்!

அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் எவை என இன்னமும் முடிவாகவில்லை. நாளை (27.02.2026) இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடியேயான ஆட்டம்

Topics

மதுரை வட்டார ஆலயங்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு வழிபாடு

மாவட்டத்தில் உள்ள கோயில்களில், மார்ச்..6..ம் தேதி வெள்ளிக்கிழமை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

மார்ச் 1ல் மதுரை வரும் பிரதமர் மோடி! எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

வரும் ஞாயிறு மார்ச் 1 பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்நாட்டில்...

‘3 முறை முதல்வர்’ ஓ.பன்னீர்செல்வம், ‘குடும்பக் கட்சி’ திமுக.,வில் இணைந்தார்!

மதிமுகவினர் திரும்பவும் திமுகவுக்கு வந்தபோது கருணாநிதி சொன்னார். "மதிமுக என்பதற்கு அர்த்தம் "மறுபடியும் திமுக" என்பதுதான்" இப்ப... அதிமுகவுக்கு அர்த்தம்  “அவங்களும் திமுகதான்”

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

T20 WC 2026: விறுவிறுப்பான கட்டத்தில் சூப்பர் 8 போட்டிகள்!

அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் எவை என இன்னமும் முடிவாகவில்லை. நாளை (27.02.2026) இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடியேயான ஆட்டம்

ஹைதராபாத் தூத்துக்குடி இடையே நேரடி ரயில் சேவை; திருவண்ணாமலை வழி!

ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கான அறிவிப்புகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்? 

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

Entertainment News

Popular Categories