கேரள சட்டமன்ற கலாட்டா: ஹார்ட் அட்டாக்கில் தொண்டர் பலி

Published:

kerala4 திருவனந்தபுரம்: கேரள சட்டமன்றத்தில் இன்று வரலாறு காணாத அளவில் நிகழ்ந்த அடிதடி ரகளையில், வெளியே நின்றிருந்த எல்.டி.எஃப் ஆதரவாளர் ஒருவர் ஹார்ட் அட்டாக்கில் உயிரிழந்தார். கேரள சட்டமன்றத்தில் இதுவரை கண்டிராத காட்சிகள் அரங்கேறின. நிதியமைச்சர் கே.எம். மாணி சட்டமன்றத்தில் பட்ஜெட் உரையை வாசித்தார். அப்போது எதிர்க்கட்சிகள் பெரும் அமளியில் ஈடுபட்டு பின்னர் கைகலப்பில் ஈடுபட்டனர். ஆளும் கூட்டணிக்கும் எதிர்க்கட்சியான இடதுசாரி கூட்டணிக்கும் இடையே பெரும் கைகலப்பு ஏற்பட்டது. சபாநாயகர் இருக்கை தூக்கி விசிறியடிக்கப்பட்டது. நாற்காலிகள் பறந்தன. அவைக்கு உள்ளே அமளி ஏற்பட்டபோது, வெளியே தொண்டர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, போராட்டக்காரர்களை கலைத்தனர். இந்தக் காட்சிகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த இடதுசாரி கூட்டணி ஆதரவாளர் ஒருவர் ஹார்ட் அட்டாக்கில் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின. இதற்கிடையே கடும் அமளிக்கு இடையிலும் பட்ஜெட் உரையை வாசித்து முடித்தார் கே.எம். மாணி.

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்... : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img