பெங்களூரு ஒரே குடும்பத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம்: கொலை என விசாரணையில் தகவல்

Published:

பெங்களூரு: பெங்களூருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், அவர்களில் 5 பேரைக் கொன்றுவிட்டு அந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீஸார், முதல்கட்ட விசாரணையில் யத்தீஷ் தனது தாய்-தந்தை, 3 சகோதரிகளுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து அவர்களைக் கொன்றுவிட்டு, பின்னர் மின்விசிறியில் தூக்குப்போட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது. யத்தீஷ் எதற்காக தனது குடும்பத்தினரைக் கொலைசெய்தார் என்பது தெரியவில்லை என்றும், கொலைசெய்துவிட்டு, பின்னர் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலை ஏன் என்பதும் தெரியவில்லை. இதுகுறித்து ஞானபாரதி போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img