இது ‘இங்கிலாந்தின் மகள்’: நிர்பயா ஆவணப் படத்துக்கு பதிலடி

uk_documentaryபுது தில்லி: தில்லி துணை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த விவகாரத்தில், திகார் சிறையில் அடைக்கப் பட்டுள்ள குற்றவாளி தினேஷ் சிங்கிடம் பேட்டி எடுத்து, ஆவணப் படம் ஒன்றை உருவாக்கினார் பிரிட்டிஷ் பெண் லெஸ்லீ உட்வின். இது இந்தியாவில் பெரும் பரபரப்பையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. அந்த ஆவணப் படத்தில் தினேஷ் சிங் கூறிய கருத்துகள், இந்தியாவில் உணர்ச்சிகளைத் தூண்டும் விதத்தில் அமைந்திருந்தன. எனவே, அந்த ஆவணப் படத்தை ஒளிபரப்ப தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால், தடையை மீறி, உலக அளவில் அந்த ஆவணப் படத்தை பிபிசி நிறுவனம் ஒளிபரப்பியதுடன், யுடியூப் இணையத்தில் பதிவேற்றி, பலர் அதனைப் பார்க்க வழி செய்தது. இந்நிலையில், இந்தியாவின் மகள் என்ற ஆவணப் படத்தை ஒளிபரப்பி, இந்தியாவை மோசமான வகையில் சித்திரித்த லெஸ்லி உட்வினின் ஆணவத்தை கண்டிக்கும் வகையில், இங்கிலாந்தின் மகள் என்ற ஆவணவப் படத்தை எடுத்துள்ளார் இந்தியர் ஒருவர். இந்தியரான ஹர்வீந்தர் சிங் என்பவர் மேற்கு நாடுகளின் பாலியல் பலாத்கார சம்பவங்களை தோலுரித்துக் காட்டும் வகையில், இங்கிலாந்தின் மகள் ஆவணப் படத்தைத் தயாரித்துள்ளார். இங்கிலாந்தில் மட்டும் ஒரு நாளைக்கு 250 பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ள ஹர்வீந்தர் சிங், பாதிக்கப்பட்ட 10 சதவீதம் பெண்கள் தங்களது அனுபவங்களை இந்த ஆவணப் படத்தில் தெரிவித்துள்ளனர் என்றார். இங்கிலாந்திலும் பெண்கள் பலாத்காரத்திற்கு ஆளாவதற்குக் காரணம் பெண்கள்தான் என்று மூன்றில் ஒரு பங்கு ஆண்கள் கருதுகின்றனர். அங்கு பெண்கள் கொலை செய்யப்படும் விகிதம் குறைவாக இருந்தாலும் பலாத்கார சம்பவங்களை தடுக்க முடியவில்லை என்று ஹர்வீந்தர் சிங் குற்றம் சாட்டுகிறார். இந்த ஆவணப் படம் இப்போது பதிலுக்கு பதிலாகக் கூறப்படுகிறது. [su_youtube url=”https://www.youtube.com/watch?v=twUmDDMX9tU”]

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Topics

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் மீண்டும் வெடி விபத்து..

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து23பேர் உயிரிழந்த நிலையில் பட்டாசு...

பஞ்சாங்கம் ஏப்ரல் 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories