புது தில்லி: தில்லி துணை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த விவகாரத்தில், திகார் சிறையில் அடைக்கப் பட்டுள்ள குற்றவாளி தினேஷ் சிங்கிடம் பேட்டி எடுத்து, ஆவணப் படம் ஒன்றை உருவாக்கினார் பிரிட்டிஷ் பெண் லெஸ்லீ உட்வின். இது இந்தியாவில் பெரும் பரபரப்பையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. அந்த ஆவணப் படத்தில் தினேஷ் சிங் கூறிய கருத்துகள், இந்தியாவில் உணர்ச்சிகளைத் தூண்டும் விதத்தில் அமைந்திருந்தன. எனவே, அந்த ஆவணப் படத்தை ஒளிபரப்ப தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால், தடையை மீறி, உலக அளவில் அந்த ஆவணப் படத்தை பிபிசி நிறுவனம் ஒளிபரப்பியதுடன், யுடியூப் இணையத்தில் பதிவேற்றி, பலர் அதனைப் பார்க்க வழி செய்தது. இந்நிலையில், இந்தியாவின் மகள் என்ற ஆவணப் படத்தை ஒளிபரப்பி, இந்தியாவை மோசமான வகையில் சித்திரித்த லெஸ்லி உட்வினின் ஆணவத்தை கண்டிக்கும் வகையில், இங்கிலாந்தின் மகள் என்ற ஆவணவப் படத்தை எடுத்துள்ளார் இந்தியர் ஒருவர். இந்தியரான ஹர்வீந்தர் சிங் என்பவர் மேற்கு நாடுகளின் பாலியல் பலாத்கார சம்பவங்களை தோலுரித்துக் காட்டும் வகையில், இங்கிலாந்தின் மகள் ஆவணப் படத்தைத் தயாரித்துள்ளார். இங்கிலாந்தில் மட்டும் ஒரு நாளைக்கு 250 பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ள ஹர்வீந்தர் சிங், பாதிக்கப்பட்ட 10 சதவீதம் பெண்கள் தங்களது அனுபவங்களை இந்த ஆவணப் படத்தில் தெரிவித்துள்ளனர் என்றார். இங்கிலாந்திலும் பெண்கள் பலாத்காரத்திற்கு ஆளாவதற்குக் காரணம் பெண்கள்தான் என்று மூன்றில் ஒரு பங்கு ஆண்கள் கருதுகின்றனர். அங்கு பெண்கள் கொலை செய்யப்படும் விகிதம் குறைவாக இருந்தாலும் பலாத்கார சம்பவங்களை தடுக்க முடியவில்லை என்று ஹர்வீந்தர் சிங் குற்றம் சாட்டுகிறார். இந்த ஆவணப் படம் இப்போது பதிலுக்கு பதிலாகக் கூறப்படுகிறது. [su_youtube url=”https://www.youtube.com/watch?v=twUmDDMX9tU”]
இது ‘இங்கிலாந்தின் மகள்’: நிர்பயா ஆவணப் படத்துக்கு பதிலடி
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari