மும்பை தாக்குதல் குற்றவாளி லக்வி விடுதலை: இந்தியா கண்டனம்

Published:

laqvi இஸ்லமாபாத்: மும்பை தாக்குதலின் முக்கியக் குற்றவாளியான  லக்வி விடுதலை செய்யப்பட்டுள்ளதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ’ மும்பை தாக்குதலில் தொடர்புடைய முக்கியக்  குற்றவாளி, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் லக்வி  பாகிஸ்தானில் உள்ள அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது பாகிஸ்தானில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதே வழக்கில் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாகவும் இவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் மும்பை தாக்குதல் வழக்கில் ஜாமீன் பெற்ற பிறகும் ஆப்கானியர் ஒருவரை கடத்தியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தம்மை சட்ட விரோதமாக சிறையில் அடைத்து வைத்துள்ளதாக அவர் கூறினார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி லக்வி மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்களை தாக்கல் செய்ய அரசு தரப்பு தவறிவியதால் அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டார். இதை அடுத்து லக்வி எந்நேரமும் விடுவிக்கப்படலாம். ஆனால் லக்வியை விடுவிக்கக் கூடாது என இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img