வசூலில் புதிய சாதனை படைத்த ‘பத்மாவத்’

பல்வேறு தடைகளை மீறி வெளியான பத்மாவத் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் 3 நாளில் ரூ.80.50 கோடியைத் தொட்டுள்ளது புதிய சாதனையாகப் பார்க்கப் படுகிறது.

பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் தீபிகா படுகோனே ராணி பத்மினியாக நடித்து உருவாகியுள்ள படம் பத்மாவத். இந்தப் படத்தில் ராணி பத்மினியின் வாழ்க்கையை தவறாக சித்திரித்திருப்பதாகக் கூறி, ராஜபுத் இனத்தைச் சேர்ந்த கர்னி சேனா அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ராஜ்புத் இனத்தவர்களின் போராட்டம் காரணமாக ராஜஸ்தான், குஜராத், ஹிமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இப்படம் திரையிடப் பட தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடையை நீக்குமாறு உச்ச நீதிமன்றத்தை அணுகி, உச்ச நீதிமன்றம் தடையை நீக்கி உத்தரவிட்டது. இதை அடுத்து குடியரசு தினத்தை முன்னிட்டு இப்படம் திரைக்கு வந்தது. ஆனால், வடமாநிலங்களில் நிலவும் பதற்றம் காரணமாக, இப்படம் திரையிடப் படுவதில் தடை ஏற்பட்டது. தென்மாநிலங்களில் வழக்கமான எதிர்பார்ப்புடன் வெளியானது. தமிழகம் முழுவதும் 150க்கும் அதிகமான திரையரங்குகளில், நீக்கப்பட்ட காட்சிகளுடன், பத்மாவத் திரையிடப்பட்டது. இந்தப் படத்தைப் பார்த்து பலரும் பாராட்டி வருவதுடன், படமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

உலகம் முழுவதும் வெளியான இப்படம் ரூ.80.50 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூல் படைத்துள்ளது. முதல் நாளில் ரூ.19 கோடி வசூல் படைத்த பத்மாவத் 2வது நாளில் ரூ.27.50 கோடி வசூல் படைத்தது. விடுமுறை நாளான ஞாயிறு இப்படம் ரூ.50 கோடி வசூல் படைத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories