திருவனந்தபுரம்: பட்ஜெட் தாக்கலின் போது, கேரள சட்டப் பேரவையில் வன்முறையில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மார்ச் 13ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று கேரள சட்டப்பேரவையில் நிதியமைச்சர் கே.எம் மாணி பட்ஜெட் தாக்கல் செய்தபோது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது, பேரவைத் தலைவரின் இருக்கை, கணினி, ஒலிப்பெருக்கி உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்டன. எம்.எல்.ஏக்கள் அடிதடி ரகளையில் இறங்கினர். இந்நிலையில், சட்டப்பேரவை வன்முறைகள் குறித்து குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அனுப்பப் போவதாக, கேரள ஆளுநர் பி.சதாசிவம் சனிக்கிழமை தெரிவித்தார். மேலும், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சதாசிவம் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் சட்டப்பேரவைச் செயலரின் புகாரின் பேரில் வன்முறையில் ஈடுபட்ட எம்.எல்.ஏக்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான விடியோ ஆதாரங்களும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Popular Categories