100க்கும் மேற்பட்ட பெண்களை திருமண ஆசை காட்டி பல லட்சம் பணம் மோசடியில் ஈடுபட்ட நபர் கைது…

100க்கும் மேற்பட்ட பெண்களை திருமண ஆசை காட்டி பல லட்சம் பணம் மோசடியில் ஈடுபட்ட ஃபர்ஹான் தசிர் கான் என்ற 35வயது நபரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதிலும் இருந்து 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் திருமணம்  செய்து கொள்வதாக கூறி பல லட்சம் ரூபாயை சுருட்டிய  35 வயதுடைய நபரை போலீசார் டெல்லியில் கைது செய்தனர். 
எய்ம்ஸ்சில்  பணிபுரியும் பெண் டாக்டர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில்,போலீசார் கைது செய்தனர்.

பெண் டாக்டர் அளித்த புகாரில்,  கானை ஒரு   ஆன் லைனில் திருமண பதிவு மையத்தில்  சந்தித்ததாகவும், அங்கு அவர் தன்னை ஒரு இளங்கலை மற்றும் ஒரு அனாதை என்றும் அறிமுகப்படுத்தினார். தான் இன்ஜினியரிங், எம்பிஏ படித்திருப்பதாகவும், சொந்தமாக தொழில் நடத்தி வருவதாகவும் முதலில் பெண் டாக்டரை  நம்ப வைத்துள்ளார்.

அவரை திருமணம் செய்து கொள்வதாகவும், தனது தொழிலை விரிவுபடுத்த பணம் தேவைப்படுவதாகவும் கூறி, கான் டாக்டரிடம்  ரூ.15 லட்சம் கடன் வாங்கியதாக அவர் தெரிவித்தார்.
விசாரணையில், கான் மேட்ரிமோனியல் போர்ட்டலில் பல போலி ஐடிகளை உருவாக்கி அதன் மூலம் உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், குஜராத், டெல்லி, பஞ்சாப், மும்பை, ஒடிசா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பல பெண்களுடன் நட்பு வைத்திருப்பதை போலீசார் விசாரணையில் கண்டறிந்தனர். 

அவர் கொல்கத்தாவில் இருந்து கண்காணிக்கப்பட்டு இறுதியாக வியாழக்கிழமை பஹர்கஞ்சில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டார், என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். 
கான் பெண்களைக் கவர விவிஐபி பதிவு எண்ணைக் கொண்ட உயர்தர காரைக் காட்டி, அது தனக்குச் சொந்தமானது என்று கூறிக் கொண்டார். உண்மையில், அந்த கார் அவரது உறவினர் ஒருவருக்கு சொந்தமானது என்று போலீசார் தெரிவித்தனர்.  

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

அவர் ஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்திற்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுடன் வீடியோ அழைப்புகள் மூலம் தொடர்பு கொண்டு தான் ஒரு பணக்காரர் என்று காட்டிக் கொள்வாராம். அவர் ஆண்டுக்கு 30 முதல் 40 லட்சம் ரூபாய் சம்பாதிப்பதாக அவரிடம் சிக்கிய பெண்களிடம்  ஆசை வார்த்தை கூறுவாராம் என  போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

உண்மையில், கான் திருமணமானவர், அவருக்கு மூன்று வயது மகள், தந்தை மற்றும் ஒரு சகோதரி உள்ளனர் என்றும்  இருப்பினும், தனது பெற்றோர் சாலை விபத்தில் இறந்துவிட்டதாக அவர் பெண்களிடம்  நாடகமாடியதாக ஆடியாதாக பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்துள்ளனர். 

அவரிடம் இருந்து ஒரு கையடக்கத் தொலைபேசி, நான்கு சிம் கார்டுகள், கார், ஒன்பது ஏடிஎம் கார்டுகள் மற்றும் கைக்கடிகாரம் ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.ஆன் லைனில்  திருமண பதிவு மையத்தில் பல்வேறு போலி பெயர்களில் வரன் தேடுவதாக அறிவித்த அந்த மோசடிப் பேர்வழி, ஒரு பெண்ணிடம் 15 லட்சம் ரூபாய் பணம் பெற்று திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக புகார் எழுந்துள்ளது.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

போலீசார் விசாரித்த போது இதே போல்100க்கு மேற்பட்ட பெண்களை ஏமாற்றி இருப்பதாகவும் பலரிடம் பணம் வாங்கி இருப்பதாகவும் ஃபர்ஹான் தசிர் கான் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.

images 28 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories