January 23, 2025, 5:21 AM
23.8 C
Chennai

நாளந்தா பல்கலை. வேந்தர் பதவியில் இருந்து விலகல்: அமர்த்தியா சென் கடிதம்

AmartyaSen புது தில்லி: நாளந்தா பல்கலை. வேந்தர் பதவியில் இருந்து தாம் விலகுவதாக கடிதம் அனுப்பியுள்ள பொருளாதார மேதை அமர்த்தியா சென், மத்திய அரசின் அனுமதி தாமதமாவதால் தாம் இரண்டாவது முறையாக பதவி வகிக்க விரும்பவில்லை என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். நோபல் பரிசு பெற்றவரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான அமர்த்தியா சென், பீகார் மாநிலம் நாளந்தா பல்கலைக்கழகத்தின் வேந்தராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது முதல் பதவிக் காலம் கடந்த ஜூலை மாதம் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து ஜனவரி மாதம் நடைபெற்ற பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில், அமர்த்தியா சென் மீண்டும் பல்கலைக்கழக வேந்தராக தொடர வேண்டும் என்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமர்த்தியா சென் இரண்டாவது முறையாக மீண்டும் அந்தப் பதவியை வகிப்பதற்காக விண்ணப்பத்தை மத்திய அரசுக்கு அனுப்பினார். ஆனால் இந்த விண்ணப்பம் மீது முடிவு எடுக்க மத்திய அரசு தாமதப்படுத்தியதாக அவர் குற்றம் சாட்டினார். இதனால் தனது விண்ணப்பத்தை திரும்பப் பெற்றுக் கொள்வதாக, பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழுவுக்கு அவர் கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதத்தில், ‘‘எனது விண்ணப்பம் மீது முடிவு எடுக்க ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் அதில் அவர்கள் காட்டும் ஈடுபாடில் உறுதியின்மை ஆகியவை நாளந்தா பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்துக்கும், அதன் கல்வி முறைக்கும் உதவாது. பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு ஒருமனதாக என்னை பதவியில் தொடரும்படி கூறியிருந்தாலும், பல்கலைக்கழகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு இதன் வேந்தராகத் தொடருவதில் இருந்து நானாகவே விலகிக் கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ:  மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு; புதிய மேல்சாந்தி பதவியேற்பு!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதக் கலவரத்தை தூண்டும் திமுக.,? இந்து முன்னணி கண்டனம்

தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டுகிறதா திமுக. இன்று கேள்வி எழுப்பி, திருப்பரங்குன்றத்தில் திமுக...

கோமியம்… கோமூத்ரா… இன்னா மேட்டரு பா!

Amazon போன்ற பல இணையதளங்களில் கோமூத்ரம் விற்பனை செய்யப்படுகிறது.

விக்கிரமங்கலம் அங்காள ஈஸ்வரி கருப்புசாமி கோவில் மகா கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக ஏற்பாடுகளை திருப்பணிகுழு மற்றும் விக்கிரமங்கலம் எட்டூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

பஞ்சாங்கம் ஜன.21- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்!

கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதிக்கு பிரணவ மந்திர பொருளை உபதேசம் செய்தார். அப்போது அம்பிகையின் மடியில் இருந்த முருகன் மந்திரத்தை கேட்டுவிட்டார்.