மதமாற்றம் தொடர்பான வழக்கு; அரசியல் சாயம் கொடுப்பதை நிறுத்துமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

supreme court of india - 2026

கட்டாய மதமாற்றம் தொடர்பான வழக்கில், அரசியல் நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு என்று கூறி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ‘இது முக்கியமான பிரச்னை. உங்கள் அரசியலை இதில் கலக்க வேண்டாம்’ என உச்ச நீதிமன்றம் தமிழக அரசைக் கடுமையுடன் குறிப்பிட்டது.

கட்டாய மதமாற்றம் தொடர்பாக வழக்குரைஞர் அஸ்வினி குமார் உபாத்யாய, உச்ச நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடர்ந்துள்ளார். ‘மக்களை அச்சுறுத்தியும், பரிசுகள், பணப் பலன்கள் வழங்கி ஏமாற்றியும் நடக்கும் மதமாற்று மோசடியை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, ‘கட்டாய மதமாற்றம் என்பது மிகப் பெரும் பிரச்னையாகும். இது நாட்டின் பாதுகாப்புடன் தொடர்புடையது’ என, உச்ச நீதிமன்ற அமர்வு கூறியிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் சி.டி.ரவிகுமார் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவும்படி அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணியிடம் அமர்வு கேட்டது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் குறுக்கிட்டு, ”இது அரசியல் நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு. தமிழகத்தில் இதுபோன்று கட்டாய மதமாற்றம் ஏதும் நடக்கவில்லை” என்று குறிப்பிட்டார்.

இதற்கு அமர்வு கண்டனம் தெரிவித்தது. நீங்கள் இவ்வாறு கொந்தளிப்பதற்கு வேறு சில காரணங்கள் இருக்கலாம். நீதிமன்றத்தை வேறொரு களமாக மாற்ற முயற்சிக்க வேண்டாம். நாங்கள் நாடு முழுதும் உள்ள நிலைமை குறித்து ஆராய்ந்து வருகிறோம். கட்டாய மதமாற்றம் என்பது நிச்சயம் மிகப் பெரும் பிரச்னைதான். உங்கள் மாநிலத்தில் அந்தப் பிரச்னை இருந்தால், அது ஆபத்து; இல்லாவிட்டால் நல்லது. உங்களைக் குறிப்பிட்டு இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக எப்படி கருதுகிறீர்கள். இந்த விவகாரத்தை வீணாக அரசியலாக்க வேண்டாம்… என்று கண்டித்தனர்.

இதை அடுத்து, வழக்கின் விசாரணை பிப்ரவரி ஏழாம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

Entertainment News

Popular Categories