புவனேசுவரம்: ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் குஜாங் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப் பட்ட பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்தது. இருப்பினும் அவருக்கு சிறிய அளவில் தையல் போட வேண்டியிருந்தது. சிகிச்சை அளித்த மருத்துவர் அந்தப் பெண்ணுக்கு தையல் போடுவதற்கு முன்பே சென்று விட்டார். இதையடுத்து அங்கே பணியாற்றும் துப்புரவு தொழிலாளியும், மருத்துவ உதவியாளர்களும் சேர்ந்து அந்தப் பெண்ணுக்கு தையல் போட்டுள்ளனர். இதுபற்றி பெண்ணின் உறவினர்கள் மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரியிடம் அளித்த புகாரின் பேரில் பெண்ணை பரிசோதித்த மருத்துவ அதிகாரி, பெண்ணுக்கு துப்புரவுத் தொழிலாளி தையல் போட்டது உண்மை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். இருப்பினும் அந்தப் பெண் அவர் நலமாக உள்ளார், உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிவித்தார்.

