அசந்து தூங்கியதால் ஆபத்து: நகை திருட்டு

Published:

குமந்தாபுரம் கடையநல்லூர் அருகேயுள்ள குமந்தாபுரத்தில் வீட்டை திறந்து வைத்து விட்டு அசந்து தூங்கியதால் மர்ம நபர்கள் நகையை திருடிச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அய்யாசாமி. இவர் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டின் கதவை திறந்து வைத்து விட்டு தூங்கி விட்டாராம். புதன்கிழமை காலை எழுந்து பார்த்த பொழுது வீட்டினுள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 100 கிராம் தங்க நகைகள் திருடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்து வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img