ஊழல் வழக்கு பதிவு: ம.பி., ஆளுநரை ராஜினாமா செய்ய உத்தரவு

ram-naresh-yadavபுது தில்லி: ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டதன் எதிரொலியாக ம.பி. ஆளுநரை ராஜினாமா செய்ய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. வனக் காப்பாளர் பணி நியமனத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்து ஊழலில் ஈடுபட்டதாக மத்தியப் பிரதேச ஆளுநர் ராம் நரேஷ் யாதவ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து அவர் மீது சிறப்பு புலனாய்வுக் குழு ஊழல் வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில் அவரை பதவி விலகுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் இன்று கேட்டுக் கொண்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் மத்தியப் பிரதேச தொழில்முறை தேர்வு வாரிய ஊழல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஊழலில் அரசியல்வாதிகள் முதல் மூத்த அதிகாரிகள் வரை தொடர்பு படுத்தப் பட்டுள்ளனர். இந்த ஊழலில் உயர் பதவி வகிப்பவர்களுக்கு தொடர்பு இருந்தால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி சிறப்பு புலனாய்வு குழுவுக்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர். இதைத் தொடர்ந்து ஆளுனரின் சிறப்பு தனி அதிகாரி தனராஜ் யாதவ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அம்மாநில ஆளுனர் ராம் நரேஷ் யாதவ் (வயது 86) மீது நேற்று ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், ஊழல், மோசடி ஆகிய குற்றங்களுக்காக அவர் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆளுநர், தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி 5 பேரை வனக் காப்பாளர்களாக நியமிக்க பரிந்துரை செய்தார், நேர்மைக்கு மாறாக அவர்கள் தேர்வெழுதி வெற்றி பெற்று பணி நியமனம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories