ஊழல் வழக்கு பதிவு: ம.பி., ஆளுநரை ராஜினாமா செய்ய உத்தரவு

ram-naresh-yadavபுது தில்லி: ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டதன் எதிரொலியாக ம.பி. ஆளுநரை ராஜினாமா செய்ய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. வனக் காப்பாளர் பணி நியமனத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்து ஊழலில் ஈடுபட்டதாக மத்தியப் பிரதேச ஆளுநர் ராம் நரேஷ் யாதவ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து அவர் மீது சிறப்பு புலனாய்வுக் குழு ஊழல் வழக்கு பதிவு செய்தது. இந்நிலையில் அவரை பதவி விலகுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் இன்று கேட்டுக் கொண்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் மத்தியப் பிரதேச தொழில்முறை தேர்வு வாரிய ஊழல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஊழலில் அரசியல்வாதிகள் முதல் மூத்த அதிகாரிகள் வரை தொடர்பு படுத்தப் பட்டுள்ளனர். இந்த ஊழலில் உயர் பதவி வகிப்பவர்களுக்கு தொடர்பு இருந்தால், அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி சிறப்பு புலனாய்வு குழுவுக்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர். இதைத் தொடர்ந்து ஆளுனரின் சிறப்பு தனி அதிகாரி தனராஜ் யாதவ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அம்மாநில ஆளுனர் ராம் நரேஷ் யாதவ் (வயது 86) மீது நேற்று ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், ஊழல், மோசடி ஆகிய குற்றங்களுக்காக அவர் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆளுநர், தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி 5 பேரை வனக் காப்பாளர்களாக நியமிக்க பரிந்துரை செய்தார், நேர்மைக்கு மாறாக அவர்கள் தேர்வெழுதி வெற்றி பெற்று பணி நியமனம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories