புதுதில்லி: கச்சா எண்ணெய் விலைக் குறைவின் முதல் பயன் மக்களுக்கே கிடைத்தது என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மாநிலங்களவையில் தெரிவித்தார். பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றுக்கு உற்பத்தி வரியை மத்திய அரசு உயர்த்தியதில், அரசு மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், வளர்ச்சிப் பணிகளுக்கு நிதியை சேமிக்கவே உற்பத்தி வரி உயர்த்தப்பட்டதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மாநிலங்களவையில் இது குறித்துப் பேசிய மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரன் பிரதான்… “கச்சா எண்ணைய் விலைக் குறைவின் முதல் பயன் மக்களுக்குதான் அளிக்கப்பட்டது. வளர்ச்சிப் பணிகளுக்காக நிதித் துறைக்கு சேமிக்க வேண்டிய கடமை உள்ளது; எனவே தான் உற்பத்தி வரி உயர்த்தப்பட்டது” என்று தெரிவித்தார்.
கச்சா எண்ணெய் விலைக் குறைவின் முதல் பயன் மக்களுக்கே: தர்மேந்திர பிரதான்
Popular Categories


