சென்னை: பன்றிக் காய்ச்சலுக்கு தடுப்பு மருந்தாக, ‘கபசுர குடிநீர்’ அருந்தலாம்’ என தமிழ்நாடு சித்த மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ‘டெங்குக் காய்ச்சலுக்கு, நில வேம்பு கஷாயம் அருந்துவதைப் போல் பன்றிக் காய்ச்சலுக்கு இந்த மருந்து என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பன்றிக் காய்ச்சல் என்பது வைரஸ் நோய். இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடிக்கடி கை கழுவ வேண்டும். நோய் பாதிக்கப்பட்டவர்கள் தனியாக இருக்க வேண்டும். தனி அறையில் இருப்பது நல்லது. தமிழகத்தில், பரவலாக பன்றி காய்ச்சல் இல்லை என்றாலும், வெளி மாநிலங்களில் இருந்து இங்கே வருவோருக்கு பன்றிக் காய்ச்சல் தொற்று உள்ளதாம். அவர்களுக்கு, ‘கபசுர குடிநீர்’ இங்கே வழங்கப்படுகிறது. ‘கபசுர குடிநீர் கஷாயம்’ தயாரிக்க, ‘கபசுர கஷாய’ சூரண பொடியை 10 கிராம் எடுத்து, 200 மி.லி., தண்ணீரில் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். அது, 50 மி.லி.,யாகும் வரை சுண்டக் காய்ச்சிய பின், அதை வடிகட்டி காலையிலும் மாலையிலும் அருந்த வேண்டும். இந்த கபசுர கஷாய சூரணம் ஒரு பாக்கெட் ரூ.80க்கு விற்கப்படுகிறது. ‘கபசுர குடிநீர்’ கஷாயம் சூரணத்தில், நில வேம்பு, சிறு தேக்கு, சுக்கு, திப்பிலி, லவங்கம், ஆடாதொடை வேர், கற்பூரவல்லி, கோரா கிழங்கு, அக்ரகாரம், சீந்தில், போஸ்டம் என 11 வகையான மூலிகைகள் உள்ளன. தலைமைச் செயலக வளாகத்தில், தமிழ்நாடு சித்த மருத்துவர்கள் சங்கம், தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம், சித்த மருத்துவ அலுவலர்கள் சங்கம் சார்பில், சித்த மருத்துவ முகாம் மற்றும் மூலிகை கண்காட்சி நடத்தப்படுகிறது. முகாமில், ‘நில வேம்பு கஷாயம், கபசுர குடிநீர்’ வழங்கப்படுகிறது. தொற்றா நோய்களான ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், இதய நோய் போன்றவற்றுக்கும் இங்கே மருந்து வழங்கப்படுகிறது. இத்தகைய நோய்கள் நம்மை அணுகா வண்ணம் பாதுகாக்க, பொது ஆலோசனை வழங்கப்படுகிறது. வாத நோய்கள், அறுவை சிகிச்சை செய்யக்கூடிய நோய்களுக்கு வர்ம சிகிச்சை அளிக்கப்படுகிறது. அனைத்து தலைமைச் செயலக ஊழியர்களுக்கும் தலா ஒரு மூலிகைக் கன்று இலவசமாக வழங்கப்படுகிறது. முகாம் நடைபெறும், பத்து நாட்களும், தூதுவளை சூப், இதய நோய்க்கான சூப் தினமும் வழங்கப்படுகிறது. மொத்தம், 30 வகையான சித்த மருந்துகள் வழங்கப்படுகின்றன.
Hot this week
சற்றுமுன்
இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி
சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக
நெல்லை
தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!
திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
சுற்றுலா
மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
விளையாட்டு
IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!
ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics
சற்றுமுன்
இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி
சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக
நெல்லை
தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!
திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
சுற்றுலா
மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
விளையாட்டு
IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!
ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.
உரத்த சிந்தனை
கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!
முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...
அரசியல்
அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!
இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

