சென்னை தலைமைச் செயலகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு சித்த மருந்து

சென்னை: பன்றிக் காய்ச்சலுக்கு தடுப்பு மருந்தாக, ‘கபசுர குடிநீர்’ அருந்தலாம்’ என தமிழ்நாடு சித்த மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ‘டெங்குக் காய்ச்சலுக்கு, நில வேம்பு கஷாயம் அருந்துவதைப் போல் பன்றிக் காய்ச்சலுக்கு இந்த மருந்து என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பன்றிக் காய்ச்சல் என்பது வைரஸ் நோய். இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடிக்கடி கை கழுவ வேண்டும். நோய் பாதிக்கப்பட்டவர்கள் தனியாக இருக்க வேண்டும். தனி அறையில் இருப்பது நல்லது. தமிழகத்தில், பரவலாக பன்றி காய்ச்சல் இல்லை என்றாலும், வெளி மாநிலங்களில் இருந்து இங்கே வருவோருக்கு பன்றிக் காய்ச்சல் தொற்று உள்ளதாம். அவர்களுக்கு, ‘கபசுர குடிநீர்’ இங்கே வழங்கப்படுகிறது. ‘கபசுர குடிநீர் கஷாயம்’ தயாரிக்க, ‘கபசுர கஷாய’ சூரண பொடியை 10 கிராம் எடுத்து, 200 மி.லி., தண்ணீரில் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். அது, 50 மி.லி.,யாகும் வரை சுண்டக் காய்ச்சிய பின், அதை வடிகட்டி காலையிலும் மாலையிலும் அருந்த வேண்டும். இந்த கபசுர கஷாய சூரணம் ஒரு பாக்கெட் ரூ.80க்கு விற்கப்படுகிறது. ‘கபசுர குடிநீர்’ கஷாயம் சூரணத்தில், நில வேம்பு, சிறு தேக்கு, சுக்கு, திப்பிலி, லவங்கம், ஆடாதொடை வேர், கற்பூரவல்லி, கோரா கிழங்கு, அக்ரகாரம், சீந்தில், போஸ்டம் என 11 வகையான மூலிகைகள் உள்ளன. தலைமைச் செயலக வளாகத்தில், தமிழ்நாடு சித்த மருத்துவர்கள் சங்கம், தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம், சித்த மருத்துவ அலுவலர்கள் சங்கம் சார்பில், சித்த மருத்துவ முகாம் மற்றும் மூலிகை கண்காட்சி நடத்தப்படுகிறது. முகாமில், ‘நில வேம்பு கஷாயம், கபசுர குடிநீர்’ வழங்கப்படுகிறது. தொற்றா நோய்களான ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், இதய நோய் போன்றவற்றுக்கும் இங்கே மருந்து வழங்கப்படுகிறது. இத்தகைய நோய்கள் நம்மை அணுகா வண்ணம் பாதுகாக்க, பொது ஆலோசனை வழங்கப்படுகிறது. வாத நோய்கள், அறுவை சிகிச்சை செய்யக்கூடிய நோய்களுக்கு வர்ம சிகிச்சை அளிக்கப்படுகிறது. அனைத்து தலைமைச் செயலக ஊழியர்களுக்கும் தலா ஒரு மூலிகைக் கன்று இலவசமாக வழங்கப்படுகிறது. முகாம் நடைபெறும், பத்து நாட்களும், தூதுவளை சூப், இதய நோய்க்கான சூப் தினமும் வழங்கப்படுகிறது. மொத்தம், 30 வகையான சித்த மருந்துகள் வழங்கப்படுகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories