சென்னை: பன்றிக் காய்ச்சலுக்கு தடுப்பு மருந்தாக, ‘கபசுர குடிநீர்’ அருந்தலாம்’ என தமிழ்நாடு சித்த மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ‘டெங்குக் காய்ச்சலுக்கு, நில வேம்பு கஷாயம் அருந்துவதைப் போல் பன்றிக் காய்ச்சலுக்கு இந்த மருந்து என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பன்றிக் காய்ச்சல் என்பது வைரஸ் நோய். இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடிக்கடி கை கழுவ வேண்டும். நோய் பாதிக்கப்பட்டவர்கள் தனியாக இருக்க வேண்டும். தனி அறையில் இருப்பது நல்லது. தமிழகத்தில், பரவலாக பன்றி காய்ச்சல் இல்லை என்றாலும், வெளி மாநிலங்களில் இருந்து இங்கே வருவோருக்கு பன்றிக் காய்ச்சல் தொற்று உள்ளதாம். அவர்களுக்கு, ‘கபசுர குடிநீர்’ இங்கே வழங்கப்படுகிறது. ‘கபசுர குடிநீர் கஷாயம்’ தயாரிக்க, ‘கபசுர கஷாய’ சூரண பொடியை 10 கிராம் எடுத்து, 200 மி.லி., தண்ணீரில் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். அது, 50 மி.லி.,யாகும் வரை சுண்டக் காய்ச்சிய பின், அதை வடிகட்டி காலையிலும் மாலையிலும் அருந்த வேண்டும். இந்த கபசுர கஷாய சூரணம் ஒரு பாக்கெட் ரூ.80க்கு விற்கப்படுகிறது. ‘கபசுர குடிநீர்’ கஷாயம் சூரணத்தில், நில வேம்பு, சிறு தேக்கு, சுக்கு, திப்பிலி, லவங்கம், ஆடாதொடை வேர், கற்பூரவல்லி, கோரா கிழங்கு, அக்ரகாரம், சீந்தில், போஸ்டம் என 11 வகையான மூலிகைகள் உள்ளன. தலைமைச் செயலக வளாகத்தில், தமிழ்நாடு சித்த மருத்துவர்கள் சங்கம், தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம், சித்த மருத்துவ அலுவலர்கள் சங்கம் சார்பில், சித்த மருத்துவ முகாம் மற்றும் மூலிகை கண்காட்சி நடத்தப்படுகிறது. முகாமில், ‘நில வேம்பு கஷாயம், கபசுர குடிநீர்’ வழங்கப்படுகிறது. தொற்றா நோய்களான ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், இதய நோய் போன்றவற்றுக்கும் இங்கே மருந்து வழங்கப்படுகிறது. இத்தகைய நோய்கள் நம்மை அணுகா வண்ணம் பாதுகாக்க, பொது ஆலோசனை வழங்கப்படுகிறது. வாத நோய்கள், அறுவை சிகிச்சை செய்யக்கூடிய நோய்களுக்கு வர்ம சிகிச்சை அளிக்கப்படுகிறது. அனைத்து தலைமைச் செயலக ஊழியர்களுக்கும் தலா ஒரு மூலிகைக் கன்று இலவசமாக வழங்கப்படுகிறது. முகாம் நடைபெறும், பத்து நாட்களும், தூதுவளை சூப், இதய நோய்க்கான சூப் தினமும் வழங்கப்படுகிறது. மொத்தம், 30 வகையான சித்த மருந்துகள் வழங்கப்படுகின்றன.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
நெல்லை
தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!
தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.
விளையாட்டு
IND Vs ZIM T20: தொடரை வென்ற இந்திய அணி! நற்பெயர் வாங்கிய சூரியவன்ஷி!
இந்தியா தொடரை அநாயசமாக வென்றது
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
நெல்லை
தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!
தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.
விளையாட்டு
IND Vs ZIM T20: தொடரை வென்ற இந்திய அணி! நற்பெயர் வாங்கிய சூரியவன்ஷி!
இந்தியா தொடரை அநாயசமாக வென்றது
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
உரத்த சிந்தனை
கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?
தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.
இந்தியா
ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை.

