உல்லாச படகுப் பயணம்: நிதின் கட்கரி மீது விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

nitin_gadkariபுது தில்லி: தனியார் நிறுவனம் ஒன்று சலுகையாக அளித்த உல்லாசப் படகுப் பயணத்தை, மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி மேற்கொண்டதாக, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், மத்திய அமைச்சர் நிதின் கட்காரி மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த 2013 ஜூலையில், தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான உல்லாசப் படகில், அந்நிறுவனத்தின் செலவில் பயணம் செய்துள்ளனர். பிரான்ஸ் நாட்டு கடல் பகுதியில் 2 நாள் உல்லாச இரவுப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். மூத்த அமைச்சர்கள், உயரதிகாரிகள், அரசியல்வாதிகள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பத்திரிகையாளர்களை அந்றுவனம் சலுகை அளித்து வசப்படுத்தியுள்ளது. நிதின் கட்கரி போன்ற அரசியல்வாதிகளை மகிழ்விக்க அந்நிறுவனம் உல்லாசப் படகுகளை பயன்படுத்துகிறது. இதன் மூலம் அரசின் முக்கிய ரகசியங்கள் உள்ளிட்டவற்றை கார்ப்பரேட் நிறுவனங்கள் பெற்றுக் கொள்ள முடியும் என்பதால் இது தீவிர பிரச்சினையாகும். அரசியல்வாதிகளுக்கு அந்நிறுவனம் ஸ்மார்ட் போன்களை கொடுப்பதுடன், அதற்கான மாதாந்திரக் கட்டணத் தொகையையும் செலுத்தி வருகிறது. எனவே நிதின் கட்கரி உல்லாசப் படகு பயணம் விவகாரத்தில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும். – என்று கூறப்பட்டுள்ளது. இதனை நிதின் கட்கரி மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, நான் எப்போதும் புதுமையை ரசிக்க விரும்புவன். இதனால் தனியார் நிறுவனத்தினர் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டேன். இந்தப் படகுப் பயணத்தின் போது நான் அமைச்சரோ, எம்.பி, எம்.எல்.ஏ. உள்ளிட்ட எந்த அரசு பதவியையும் வகிக்கவில்லை. மேலும் இந்தப் பயணத்துக்காக எனது சொந்தப் பணத்தையே செலவு செய்தேன். நான் எந்த ஒரு கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்தும் பணம் பெறவில்லை. இதில் எந்த தவறும் செய்யவில்லை” என்றுள்ளார்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Entertainment News

Popular Categories