Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

spot_img

சற்று முன் :

சினிமா :

spot_img

ஆன்மிகம்:

― Advertisement ―

Homeஇந்தியாகர்நாடக சட்டசபைத் தேர்தல்: ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்!

கர்நாடக சட்டசபைத் தேர்தல்: ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்!

karnataka elections 1

கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு,இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. காலை முதலே வாக்குச்சாவடிகளில் வரிசைகளில் நின்று, மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது வாக்கை காலையிலேயே பதிவு செய்தார்.

காலை 9 மணி நிலவரப்படி 8.21 சத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப் பட்டது. இன்று பதிவாகும் வாக்குகள் வரும் 13ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப் படும்.

கர்நாடகாவில் புதிய சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிவடைகிறது.

ஆளும் பாஜக., காங்கிரஸ், மஜத., உட்பட பல்வேறு கட்சியினர், சுயேச்சைகள் என 2,615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மொத்தமுள்ள 224 தொகுதிகளிலும், 5 கோடியே 31 லட்சத்து 33 ஆயிரத்து 54 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 58,545 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் 4 லட்சம் அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட போலீசார் தேர்தல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + nineteen =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari