புதுதில்லி 2015-16ம் ஆண்டிற்கான மத்திய வரவு செலவு திட்ட நிதி நிலை அறிக்கையில், பல புது திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன; நுண்ணிய நிதி நிறுவனங்களுக்கு உதவி வழங்கும் வகையில் “முத்ரா” என்று அழைக்கப்படும் நுண்ணிய அலகுகள் மேம்பாட்டு மறு நிதி முகமை தொடங்கப்படுகிறது; விபத்தில் உயிர் இழப்பபவர்களுக்கு காப்பீடு வழங்கும் வகை செய்யும் பிரதமந்திரி “சுரக்ஷா பீம யோஜான” திட்டம்; ஆண்டு ஒன்றிற்கு ரூ 12 பிரிமியம் செலுத்துவதன் வாயிலாக ரூ. 2 லட்சம் காப்பீடு பெற வசதி; “அடல் ஓய்வூதியத் திட்டம்” பிரிமியத்தில் 50% அரசு வழங்கும் இயற்கை மற்றும் விபத்து உயிர் இழப்பிற்கு காப்பீடு வழங்க பிரதம மந்திரி “ஜீவன் ஜோதி பீமா யோஜனா” மூத்த குடிமக்கள் நல நிதியம் அமைக்க யோசனை தேசிய முதலீடு மற்றும் கட்டமைப்பு நிதியம் உருவாக்கப்படும் ரயில், சாலை மற்றும் பாசனத் திட்டங்களுக்கென வரி இல்லாத கட்டமைப்பு பத்திரங்கள் புதிதாக வர்த்தகம் தொடங்குபவருக்கு உதவி வழங்க “சேது” என்றழைக்கப்படும் சுய வேலை வாய்ப்பு மற்றும் திறன் பயன்பாட்டு அமைப்பை ஏற்படுத்த யோசனை 5 பெரிய மின் திட்டங்கள் அமைக்கப்படும் தற்போது நடைமுறையில் உள்ள தங்க சேமிப்பு மற்றும் தங்க உலோக கடன் திட்டங்களுக்கு மாற்றாக செல்லத்தக்க தங்கத் திட்டம் “நிர்பயா” நிதியத்திற்கு மேலும் ரூ. 1000 கோடி மேலும் பல இடங்களில் புதிய அகில இந்திய மருத்துவ கழகங்கள், இந்திய தொழில்நுட்ப கழகங்கள் மற்றும் இந்திய மேலாண்மைக் கழகங்கள் மதிப்பிடப்பட்டுள்ள மொத்த செலவீனம் ரூ. 17,77,477 கோடி நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.9%மாக இருக்கும் நிலையான வரிக் கொள்கையும் சாதகமான வரி நிர்வாகமும் குறிக்கோளாக இருக்கும் கருப்பு பணத்துக் எதிரான போராட்டம் முன்னெடுத்துச் செல்லப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை அடுத்த ஆண்டிலிருந்து செயல்படுத்த பல்வேறு முனைகளில் முயற்சி தனிநபர் வருமான வரி விகிதத்தில் மாற்றம் இல்லை அடுத்த நிதி ஆண்டுகளில் அதாவது 4 ஆண்டுகளில் நிறுவன வரியை 30% லிருந்து 25% ஆகக் குறைக்க யோசனை பல்வேறு வரி விலக்குகளை சீரமைக்கவும் அகற்றவும் நடவடிக்கை வரி தகராறுகளை குறைக்க ஊக்குவிப்பு; வரி நிர்வாகத்தில் மேம்பாடு சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில் தனிநபருக்கு வழங்கப்படும் விலக்கு தொடரும்

