5வது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்க்ஸ்!

ipl csk won 2023 - 2026
#image_title

கடைசி 2 பந்துகளுக்கு 10 ரன்கள் தேவை என்ற கடின இலக்கை ஜடேஜா ஒரு சிக்ஸ் ஒரு ஃபோர் அடித்து சென்னை அணியை வெற்றி பெற வைத்தார்.

ஐபிஎல் 2023 இறுதிப் போட்டி திங்கள் கிழமை நேற்று குஜராத்தின் அகமதாபாத் நகரில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. ஏற்கெனவே ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்த போட்டி மழை காரணமாக மறுநாள் ஒத்திவைக்கப் பட்டது. இதை அடுத்து திங்கள் கிழமை நேற்று இந்த இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.

இந்தப் போட்டியில் சென்னை அணி, டாஸ் வென்று பந்து வீசத் தீர்மானித்தது. இதை அடுத்து முதலில் பேட் செய்தது குஜராத் அணி. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடி முதல் 7 ஓவர்களில் 67 ரன்கள் எடுத்தனர். சுப்மான் கில் 20 பந்துகளில் 39 ரன் எடுத்து ஆட்டமிழக்க, அடுத்து ஆட வந்த தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்ஸன், விருத்திமான் சாஹாவுடன் இணைந்து அதிரடி காட்டினார். இரண்டாவது விக்கெட் 14 வது ஓவரில் விழுந்த போது, அணியின் ஸ்கோர் 131 ஆக இருந்தது. சாஹா 54 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய சாய் சுதர்ஸன் 47 பந்துகளில் 6 சிக்ஸ் 8 ஃபோர்களுடன் 96 ரன் குவித்து ஆட்டமிழந்தார். இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 214 ரன் என்ற ஸ்கோர் எடுத்து, சிறந்த இலக்கை சென்னை அணிக்கு நிர்ணயித்தது.

இதன் பின் மழை குறுக்கிட்டதால், சென்னை அணிக்கு டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 15 ஓவர்களில் 171 ரன் என இலக்கு நிர்ணயிக்கப் பட்டது. மிகப்பெரும் ஸ்கோரை விரட்டிய சென்னை அணியில் எந்த பேட்ஸ்மெனும் அரை சதம் எட்டவில்லை என்றாலும், ஒவ்வொருவரும் ரன் ரேட் குறையாமல் ஆறும் நான்குமாக அடித்து குறைந்த பந்துகளில் அவரவர் பங்கை செய்தனர்.
கெய்க்வாட் 26 ரன், கான்வே 47,ஷிவம் துபே 32, அஜிங்யா ரஹானே 27, ராயுடு 19 என ரன்கள் எடுத்தனர். கேப்டன் தோனி ரன் ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். கடைசிக் கட்டத்தில் 6 பந்துகளில் 15 ரன் எடுத்து வெற்றி நாயகனாக ஜொலித்தார் ஜடேஜா. அதுவும் கடைசி இரு பந்தில் ஒரு சிக்ஸும் ஃபோரும் அடித்து 10 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றியைப் பெற்றுத் தந்த ரவிந்திர ஜடேஜா அணியின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தார்.

இதை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று கோப்பையைக் கைப்பற்றியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories