December 7, 2025, 10:49 PM
24.6 C
Chennai

உருவானது புயல்; தாமதமாகும் பருவமழை!

cyclone in arabic sea - 2025
#image_title

அரபிக் கடலில் உருவாகியுள்ள பைபோர்ஜாய் புயல் வலுப்பெற்று தீவிர புயலாக மாறியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலால் மஹாராஷ்டிரா, கோவா, கர்நாடகா மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் தென்மேற்குப் பருவமழை தாமதமாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஜூன் 5ம் தேதி அன்று மாலையில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இது நேற்று வலுப்பெற்று வடக்கு திசையில் நகா்ந்து மத்திய கிழக்கு மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற்றது. இந்தப் புயலுக்கு வங்கதேசம் பரிந்துரைத்த ‘பைபோர்ஜாய்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இன்று காலை பைபோர்ஜாய் புயல் மேலும் வலுப்பெற்று தீவிர புயலாக மாறியுள்ளது. இது கோவாவில் இருந்து மேற்கு தென்மேற்கு திசையில் 890 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறக்கூடும். இந்தப் புயலால் மஹாராஷ்டிரா, கோவா, கர்நாடகா மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வழக்கமாக கேரளாவில் தென்மேற்குப் பருவமழை பொதுவாக ஜூன் முதல் நாள் தொடங்கும். இந்த ஆண்டு ஜூன் நான்காம் நாள் தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வுத்துறை அறிவித்திருந்தது. ஆனால், அரபிக்கடலில் ஒரு காற்றாழுத்தத் தாழ்வுமண்டலம் நிலைகொண்டு அது தீவிரப் புயலாக மாறியிருப்பதால் பருவமழை தொடங்க தாமதம் ஆகலாம் எனத் தெரிகிறது.

தென்மேற்குப் பருவமழை தொடங்கும்போது வங்கக் கடலிலோ அரபிக் கடலிலோ ஒரு புயல் தோன்றினால் அது தென்மேற்குப் பருவமழை வலுவாகத் தொடங்க உதவி செய்யும். ஆனால் சில நேரம் இந்த புயல்கள் தென்மேற்குப் பருவமழையின் தொடக்கத்தைத் தாமதப்படுத்தி, மழையின் அளவையும் குறைத்து விடும்.
இன்றைய கணினி வழிகாட்டுதல்களைப் பார்க்கும்போது அரபிக்கடலில் தீவிர புயல் உருவாக வாய்ப்புள்ளது; இந்தப் புயல் மேற்குக் கடலோரப்பகுதிகளில் இருந்து சுமார் 600 கிலோமீட்டர் தூரத்தில் உருவாகி வடக்கு நோக்கி நகரக்கூடும்; இதனால் மேற்குக் கடலோர மாவட்டங்களில் மட்டும் லேசான மழை பெய்யக்கூடும்; எனவே தென்மேற்குப் பருவமழை தாமதமாகத் தொடங்க வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மைய முன்னாள் அதிகாரி முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

Topics

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories