February 11, 2025, 4:18 AM
24.6 C
Chennai

நேரடி கேஸ் மானியத்தால் கோடிக் கணக்கில் ரூபாய் மிச்சம்: பிரதமர் மோடி

narendramodi புதுதில்லி: நேரடி சமையல் எரிவாயு மானியத் திட்டத்தால், கோடிக்கணக்கான ரூபாய் மிச்சம் ஆகியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.  தில்லியில் நேற்று நாஸ்காம் அமைப்பின் 25வது ஆண்டு – வணிக பொருளாதார ஆய்வரங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார் பிரதமர் மோடி. அப்போது அவர் இதனைத் தெரிவித்தார். தகவல் தொழில்நுட்பத் துறை, தொழில் நுட்பம் மூலம் சுற்றுலா மேம்பாட்டுக்கு வகைசெய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பிரதமர், ஐ.டி., பிரிவினர் மொபைல் ஆப்களை தயாரிக்கவேண்டும் என்றும், கம்ப்யூட்டர் தொடர்பான இணையக் குற்றங்களைத் தடுக்க இது அவசியம் என்றும் கூறினார். “நான் சந்தித்த பெரும்பாலான உலகத் தலைவர்கள், கம்ப்யூட்டர் தொடர்பான குற்றங்கள் பற்றித்தான் கவலைப்படுகிறார்கள். எனவே, அந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதில் இந்திய இளைஞர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், மொபைல்போன் பயன்படுத்தவே எல்லோரும் அஞ்சுவார்கள் என்று கூறினார் மோடி. மேலும்,  சமையல் கியாஸ் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக மானியம் வழங்கப்பட்டு வருகிறது. தொழில்நுட்பத்தின் பயனால், உண்மையான பயனாளிகளுக்கு மானியம் சென்றடைவது சாத்தியம் ஆகியுள்ளது.  இத்திட்டத்தால், வேறு பயன்பாட்டுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை திருப்பி விடுவது நிறுத்தப்பட்டுள்ளது. எனது கணக்குப்படி, 10 சதவீத முறைகேடு நிறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், கோடிக்கணக்கான ரூபாய் மிச்சம் ஆகியுள்ளது… என்றார் மோடி. நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தவுடன், மூன்றே மாதங்களில் மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது. நிலக்கரிச் சுரங்கங்கள், ஒளிவுமறைவின்றி மின்னணு ஏல முறையில் விற்கப்படுகின்றன. மொத்தம் உள்ள 204 சுரங்கங்களில் 19 சுரங்கங்கள் மட்டுமே இப்போதுவரை ஏலம் விடப்பட்டுள்ளன. அவற்றின் மூலம், ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது. நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு மூலம் ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி கூறியபோது, நாங்களும் அதை அரசியலுக்காக பேசி வந்தோம். ஆனால், அந்தத் தொகையை எங்களால் நம்ப முடியவில்லை. ஆனால், 10 சதவீத நிலக்கரி சுரங்கங்களுக்கே ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடி கிடைத்த பிறகுதான், எல்லா சந்தேகங்களும் தீர்ந்துள்ளது. குட்டையை மட்டுமே பார்த்தவர்களுக்கு கடலின் அளவை கற்பனை செய்ய முடியாதுதான்.

  • என்று பிரதமர் மோடி பேசினார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை

மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்

உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,

செங்கோட்டை சிவன் கோயிலில் தைப்பூச தேரோட்டம்; எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி வடம் பிடித்து தொடங்கி வைப்பு!

செங்கோட்டை ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி அம்பாள்- குலசேகரநாத சுவாமி கோவில் தைத் தேரோட்டம்: அதிமுக எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி தேரை வடம் பிடித்து இழுத்து

Topics

பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை

மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்

உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,

செங்கோட்டை சிவன் கோயிலில் தைப்பூச தேரோட்டம்; எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி வடம் பிடித்து தொடங்கி வைப்பு!

செங்கோட்டை ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி அம்பாள்- குலசேகரநாத சுவாமி கோவில் தைத் தேரோட்டம்: அதிமுக எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி தேரை வடம் பிடித்து இழுத்து

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மதக் கலவரத்தைத் தூண்ட சதி: இந்து முன்னணி கண்டனம்!

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மத கலவரத்தை தூண்ட நினைக்கும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவிப்பதாக, அந்த அமைப்பின்

பஞ்சாங்கம் பிப்.10 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Ind Vs Eng ODI: ரோஹித் சர்மா அதிரடியில் இந்தியா வெற்றி!

ஆட்ட நாயகனாக ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியுடன் இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.

Entertainment News

Popular Categories