மனைவியை அடித்தார்… வீடியோ வைரலாச்சு! ஐபிஎஸ் பணியிலிருந்து விடுவித்தது அரசு!

Published:

ips-job-gone
ips-job-gone

மனைவியை அடித்து பணியை போக்கடித்துக்கொண்ட ஐபிஎஸ். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

எங்களுக்கு திருமணமாகி 32 ஆண்டுகள் ஆகிறது. என் மனைவியை பூவில் வைத்து பார்த்துக் கொண்டேன். எந்த குறையும் வைக்கவில்லை. எல்லா வசதிகளையும் என்னால் அனுபவித்தாள். பணம் வேண்டுமென்று கேட்டபோதெல்லாம் பணம் கொடுத்தேன். வெளிநாடுகளுக்குப் போக வேண்டும் என்ற போதெல்லாம் அனுப்பிவைத்தேன். ஆனாலும் என் மனைவி ஏன் இவ்வாறு செய்தாள் எனக்கு புரியவில்லை என்று புருஷோத்தம் சர்மா புலம்பினார்.

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த புருஷோத்தம் சர்மா அட்டிஷனல் டைரக்டர் ஜெனரல் ஆஃ பொலீஸ் ஆக நேற்று வரை பணியில் இருந்தார். அவர் தன் மனைவியை அடிக்கும் வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாக மாறியது.

இதன் மீது விசாரணை செய்த மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் இது குறித்து விவரங்களை அளிக்க வேண்டும் என்று புருஷோத்தம் சர்மாவுக்கு உத்தரவிட்டு பணியில் இருந்து நீக்கினார்.

ips-job-gone1
ips-job-gone1

ஏடிஜி ஆக பணிபுரிந்து வந்த புருஷோத்தம் தன் மனைவியை அடிக்கும் போது அவருடைய மகன் அதனை வீடியோ எடுத்து விட்டார். அந்த வீடியோக்களை முதல்வர் சவுகானுக்கும் ஹோம் மினிஸ்டர் மிஸ்ராவுக்கும், டிஜிபி விவேக் ஜோஹாருக்கும் ஷேர் செய்தார் அவருடைய மகன். அதன் பிறகு தன் தந்தை சர்மா மீது டொமெஸ்டிக் வயலென்ஸ் வழக்கு பதிவு செய்ய வேண்டுமென்ற கோரிக்கையோடு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

அந்த கடிதத்தின் மீது புருஷோத்தம் சர்மா விவரமளித்தார்… என்மீது டொமெஸ்டிக் வயலென்ஸ் வழக்கு பதிவாகவில்லை என்றும் இது என் கணவன் மனைவி இருவருக்கும் தொடர்புடையது என்றும் என் மனைவியை நான் மிகவும் பாசத்தோடு அன்போடு பார்த்துக் கொண்டேன். வேண்டுமென்றே என் மனைவியும் என் மகனும் என்னை கார்னர் செய்வதற்கு இந்த வீடியோவை எடுத்துள்ளார்கள் என்றும் குறை கூறினார்.

இந்த வழக்கு குறித்து உள்துறை அமைச்சர் மிஸ்ரா பேசுகையில் இந்த விஷயம் குறித்து மீடியா மூலம்தான் அறிந்து கொண்டேன். தற்போது வழக்கு விசாரணை நடந்து வருகிறது என்று தெரிவித்தார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img