December 5, 2025, 3:18 PM
27.9 C
Chennai

ஓஸி பஸ் பயணத்துக்காக… ஜோக்கை உண்மையாக்கி… பர்தா அணிந்து சென்ற ஆண்!

man wearing burqa for free bus travel in Karnataka - 2025

சமூக வலைதளங்களில் சமூக வலைதளங்களில் அண்மையில், ஒரு ஜோக் வைரலானது. அதில், கட்டட வேலை செய்யும் ஒருவர், வேலைக்கு வந்து புடைவை உள்ளிட்ட ஆடைகளை அவிழ்த்து ஓர் அறையில் போட்டு விட்டு, பெண் வேடம் கலைத்த ஆணாக வேலையில் ஈடுபடுவார். ஏன்பா இப்படி என்று ஒருவர் கேட்கும் போது, இலவச பயணத்துக்காக பெண் வேடம் போட்டு தினமும் காசை மிச்சப் படுத்துகிறேன் என்பார். இந்த ஜோக் இப்போது உண்மையாகியிருக்கிறது கர்நாடகாவில்!

கர்நாடக சட்டமன்றத் தேர்தலின் போது பெண்களுக்கு கட்டணமில்லாப் பேருந்து சேவை வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்தது. அதன்படி காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த பின்னர் அங்கே மகளிருக்கான கட்டணம் இல்லா பேருந்து பயணத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு சக்தி யோஜனா என்று பெயரிடப்பட்டுள்ளது.

அதே நேரம் தமிழகத்தைப் போலன்றி, கர்நாடகாவில் பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணம் செய்ய சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட பெண்கள் மட்டுமே இலவச பயணம் மேற்கொள்ளலாம். அவர்களுக்கு சக்தி கார்டு என்ற பயண அட்டை வழங்கப்படும். கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்டவர் என்ற அடையாள அட்டை இருந்தால் மட்டுமே சக்தி கார்டு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

karnataka bus travel ladies free bus pass - 2025

பெண்களுக்கு இலவசம் / இலவச பேருந்து என்று ஸ்டிக்கர் ஒட்டிய பேருந்துகளில் மட்டுமே கட்டணமில்லாமல் பயணிக்கலாம். மற்ற பேருந்துகளில் பெண்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இதில் மாநில அரசு பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தில் இலவசமாக பேருந்தில் பயணம் செய்வதற்காக ஒருவர் பர்தா அணிந்து பெண் வேடமிட்டுச் சென்றது தெரியவந்துள்ளது. பேருந்து நிறுத்தத்தில் பர்தா அணிந்து அமர்ந்திருந்த நபரின் உடல்வாகு மற்றும் செயல்பாடுகள் சந்தேகத்திற்கு உரிய வகையில் இருந்ததை அங்கிருந்த பொதுமக்கள் கவனித்தனர். இதை அடுத்து, அவரது முகத்தை திரை விலக்கிப் பார்த்தபோது அவர் ஓர் ஆண் என்று தெரியவந்துள்ளது.

58 வயதான அந்த நபர் பிச்சை எடுப்பதற்காக அந்த உடையில் வந்ததாகக் கூறி சமாளித்துள்ளார். ஆனால் அவரது பேச்சு நம்பும்படியாக இல்லை என்பதாலும், அவரிடம் பெண்கள் இலவசமாக பயணம் செய்வதற்கான சக்தி அடையாள அட்டை இருந்துள்ளதுள்ளதாலும், அந்த நபர் பேருந்தில் இலவசமாக பயணம் செய்வதற்காகத்தான் பர்தா அணிந்து வந்திருக்கிறார் என்பதை மக்கள் புரிந்து கொண்டனர். இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories