December 8, 2025, 8:27 AM
22.7 C
Chennai

ஆளுநர் குறித்த புகார்க் கடிதம்; உள்துறைக்கு அனுப்பி வைத்தார் குடியரசுத் தலைவர்!

president draupadi murmu - 2025

ஆளுநர் ரவி மீது புகார் தெரிவித்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அனுப்பிய கடிதம், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் உள்துறை அமைச்சகம் முடிவு எடுக்கும் என்று கூறப்படுகிறது.

தமிழக ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவி மீது, தொடக்கம் முதலே தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் ஆளும் அமைச்சர்கள், திமுக.,வினர் தொடர்ந்து மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகின்றனர். சட்டமன்றத்தில் சட்டவிரோத தீர்மானம் நிறைவேற்றுவது, சட்டமன்றத்தில் இருந்து ஆளுநர் வெளியேறிய போது போய்யா என்று அநாகரிகமாக சைகை காட்டுவது என கீழ்த்தரமான அரசியலில் ஈடுபட்டு வரும் திமுக.,வினர், ஆளுநர் அரசியல் பேசுகிறார் என்று கூறி அரசியல் செய்து வருகின்றனர். இந்நிலையில், தங்கள் கட்சியின் கொள்கைக்கு முரணாக ஆளுநர் பொது மேடைகளில் பேசுகிறார் என்று, ஆளுநரையும் திமுக.,வின் உறுப்பினர் என்ற அளவுக்கு நினைத்துக் கொண்டு, ஆளுநர் மீது புகார் தெரிவித்து, ஒரு புகார்க் கடிதத்தை தமிழக முதல்வர்  ஸ்டாலின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார். 

அந்தக் கடிதத்தில், அரசின் கொள்கைகளுக்கு முரணாகவும், அரசின் பணிகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகையிலும் செயல்படும் ஆளுநர் ரவி, பதவியில் இருந்து நீக்கப்படத் தகுதியானவர் என தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் ஒப்படைக்கப்பட்ட அந்தக் கடிதத்தை குடியரசுத் தலைவர் முழுமையாக படித்துப் பார்த்ததாகவும், அதன்பின், அக்கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு,  அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. .

இந்தக் கடிதத்தின் மீது, மத்திய உள்துறை அமைச்சகம்  முடிவு எடுக்கும் என்று தெரிகிறது.  இதனிடையே ஆளுநர் ரவி ஒரு வார கால பயணமாக தில்லியில் தங்கி இருக்கிறார். தமிழகத்தில் நடக்கும் நிகழ்வுகளையும் தமிழக அரசுக்கு தான் அனுப்பிய கடித விவரங்களையும் குடியரசுத் தலைவர் மற்றும் உள்துறை அமைச்சகத்திடம் ஏற்கெனவே பகிர்ந்து கொண்டுள்ளார்.  தமிழகத்தில் நிலவும் விவரங்களை அனுப்பியும் வைத்திருக்கிறார்.  இந்த நிலையில் தான் இரு தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தம் அரசு பதவி போனாலும் பரவாயில்லை இதை சொல்ல வேண்டி இருக்கிறது என்ற ரீதியில் ஒரு கருத்தை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் டிச.08 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக அரசை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்; கைது!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.

கங்கைக்கும் காவிரிக்கும் இடையிலான ஞானச் சந்திப்பு!

 கற்சிலையாக மாற்றப்பட்ட லோபமுத்ரா, தனது கணவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விந்திய மலை தலைவணங்கி, அதன் குருவான அகஸ்திய முனிவரின் வருகைக்காகக் காத்திருக்கிறது.

அர்ச்சனைப் பூக்களை மறு சுழற்சி செய்யும் ‘ஸ்டார்ட் அப்’! காசியில் கலக்கல்!

காசியைச் சேர்ந்த ஸ்டார்ட் நிறுவனமான  'ஆராத்ய கிருபா', நமோ காட்டில் புதுமை...

IND vs SA ODI: தொடரை வென்ற இந்தியா!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரைத் தொடர்ந்து ஒருநாள் போட்டித் தொடர் நடைபெற்றது. இத்டொடரில் முதல் ஆட்டம் ராஞ்சியில் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் விவகாரம்; இந்து முன்னணி இன்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உச்ச நீதிமன்றம் தரும் தீர்ப்பை ஏற்குமா திமுக அரசு இல்லை அதற்கும் உள்நோக்கம் கற்பித்து தான்தோன்றி தனமாக செயல்படுமா?

மாணவர்களின் ‘ஜய் ஸ்ரீராம்’ கோஷத்தில் அதிர்ந்த அயோத்தி ராமர் கோவில்!

முதல் முறையாக, வட இந்தியாவின் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் பக்தியின் பரந்த கலாச்சாரத்தை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது.

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories