WC 2023: இந்திய அணி பெற்ற முதல் வெற்றி!

world cup cricket 2023 - 2026
#image_title

ஒருநாள் கிரிக்கட் உலகக் கோப்பைப் போட்டி
நான்காம் நாள் – சென்னை
இந்தியா vs ஆஸ்திரேலியா – 08.10.2023

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

          ஆஸ்திரேலிய அணி (49.3 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 199 ரன், ஸ்மித் 46, வார்னர் 41, லபுசேன் 27, மிட்சல் ஸ்டார்க் 28, ஜதேஜா 3/28, குல்தீப் 2/42, பும்ரா 2/35) இந்திய அணியிடம் (விராட் கோலி 85, கே.எல். ராகுல், ஹேசல்வுட், மிட்சல் ஸ்டார்க்)

இந்தியாவின் அபாரமான பந்துவீச்சு

          பூவா தலையா வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. 49.3 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 199 ரன் எடுத்தது. ஆறு விக்கட்டுகள் சுழற்பந்து வீச்சாளர்களுக்குக் கிடைத்தது. ஆஸ்திரேலிய அணி 11ஆவது ஓவர் முடிவில் 50/1 ரன் எடுத்திருந்தனர். 25ஆவது ஓவர் முடிவில் 110/2; ஆனால் 49.3 ஓவரில் 199 ரன்னுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து விட்டனர்.

          இந்தியப் பந்துவீச்சாளர்களைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், பும்ரா 60 பந்துகளில் 40 டாட் பந்துகள் வீசினார்; ஜதேஜா 60இல் 38 டாட் பால்; அஸ்வின் 60இல் 32 டாட் பால்; குல்தீப் 60இல் 31 டாட் பால். ஸ்மித், லபுசேன், அலக்ஸ் கேரி ஆகிய மூவரின் விக்கட்டுகளை ஜதேஜா, தான் வீசிய முதல் இரண்டு பந்துகளில் எடுத்துவிட்டார்.

டக், டக், டக்

          இந்திய அணி ஆடத் தொடங்கியதும் இஷான் கிஷன், ரோஹித் ஷர்மா, ஷ்ரேயாஸ் ஐயர் மூவரும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். இதுவரை நடந்த ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் முதல் மூன்று ஆட்டக்காரர்கள் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழப்பது இதுவே முதல் முறை. தொடக்க வீரர்கள் இருவரும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழப்பது இது எட்டாவது முறை. இதற்கு முன்னர் 2004ஆம் ஆண்டு, ஜிம்பாபே அணிக்கு எதிரான ஆட்டத்தில் இது நடந்தது. எட்டாவது ஓவரின் மூன்றாவது பந்தில் கோலி ஒரு கேட்ச் கொடுக்க அதனை மார்ஷ் பிடிக்கத்தவறினார்.

The Lady luck smiled at Kholi

          அதன் பின்னர் கோலியும் ராகுலும் நிதானமாக ஆடினர். தேவைப்படும்போது ஷாட்டுகள் அடித்து, மீதி நேரத்தில் ஒரு ரன் எடுத்து, தடுத்து ஆடி வெற்றியைக் கிட்டத்தட்ட் ஏட்டியபோது விராட் கோலி, 37.4ஆவது ஓவரில், 85 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது ராகுலின் ஸ்கோர் 75. 41.2ஆவது ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்து ராகுல் இந்திய அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். ஆட்ட நேர முடிவில் ராகுல் 97 ரன், ஹார்திக் பாண்ட்யா 11 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராகுல் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

          இந்த வெற்றியோடு இந்திய அணி 2 புள்ளிகள், 0.883 ரன்ரேட்டுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. நாளை ஹைதராபாத்தில் நெதர்லாந்து நியூசிலாந்து அணிகளுக்கிடையே போட்டி நடைபெற உள்ளது. இந்திய அணியின் அடுத்த ஆட்டம் அகமதாபாத்தில் அக்டோபர் 14ஆம் தேதி பாகிஸ்தானுடன் நடைபெறும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories