
திங்கட்கிழமை (20.11.2023) உச்ச நீதிமன்றம், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) மாநிலத்தில், எதிர்காலத்தில் நீதிமன்றத்தின் தலையீட்டை நாடாமல் பேரணி ஊர்வலங்களை நடத்த அனுமதிப்பதை எவ்வாறு உறுதி செய்வது என்பது குறித்த முன்மொழிவை சென்னை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், ஆர்எஸ்எஸ்ஸிடமிருந்தும் ஆட்சேபனைகள்/பரிந்துரைகளை அழைத்த பின்னரே உயர் நீதிமன்றம் அத்தகைய திட்டத்தை பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இது எதிர்காலத்தில் தேவையற்ற வழக்குகளைத் தவிர்க்கும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த மாதத் தொடக்கத்தில், நவம்பர் 19 அல்லது 26 ஆம் தேதிகளில் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) அணிவகுப்பு நடத்த அனுமதிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ஒப்புக்கொண்டது. அதன்படி, ஆர்எஸ்எஸ் அமைப்பு முன்மொழியப்பட்ட வழித்தடங்களை மூன்று நாட்களுக்குள் மாநில அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், நவம்பர் 15 ஆம் தேதிக்குள் பாதைகள் குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
இன்று, தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கபில் சிபல், நவம்பர் 19-ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் பேரணி நடத்த அனுமதி வழங்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்திற்கு (ஆர்எஸ்எஸ்) மாநிலத்தில் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்குமாறு, காவல்துறை அதிகாரிகளுக்குப் பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அரசு தாக்கல் செய்த சிறப்பு விடுப்பு மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இரண்டு சமீபத்திய உத்தரவுகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிபதி ஜி ஜெயச்சந்திரன் அடங்கிய ஒருநபர் பெஞ்ச் அக்டோபர் 16-ம் தேதி ஒரு உத்தரவையும், அக்டோபர் 18-ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதி ஜி இளங்கோவன் அடங்கிய ஒரு நபர் பெஞ்ச் ஒரு உத்தரவையும் பிறப்பித்தது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கியது தொடர்பாக, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவுகளை தமிழக அரசு நிறைவேற்றத் தவறியதாக, நவம்பர் 1ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் விமர்சித்தது. மாநிலத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு அனுமதி வழங்குமாறு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தும், ஊர்வலம் நடத்த அரசு அனுமதி மறுத்ததை அடுத்து, அந்த அமைப்யால் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இன்று, மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், பிரதிவாதிக்கு (ஆர்எஸ்எஸ்) நிவாரணம் கிடைத்துள்ளதால், அவமதிப்பு நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இருப்பினும் இதை எதிர்மனுதாரரின் வழக்கறிஞர். சீனியர் அட்வகேட் குரு கிருஷ்ண குமார், கடுமையாக எதிர்த்தார்.
இதை அடுத்து , நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடிக்க மறுத்ததோடு, நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில், நீதிமன்றத்தின் முன் முன்மொழிவை சமர்ப்பிக்குமாறு மாநில அரசைக் கேட்டுக் கொண்டது.
“ஒவ்வொரு முறையும் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டியதில்லை. நீதிமன்ற உத்தரவுகளைப் பெறுவது, உத்தரவுகளை நிறைவேற்றுவது.. ஒவ்வொரு முறையும்.. ஏன் இப்படி இருக்க வேண்டும்? இரு தரப்பும் தங்கள் நேரத்தையும் நீதிமன்ற நேரத்தையும் கூட தேவையில்லாமல் வீணடிக்கலாம். நிலுவையில் உள்ள வேறு சில வழக்குகளில்.. எதிர்கால நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தக்கூடிய உங்கள் ஏற்பு (RSS)க்கு உட்பட்ட ஒரு திட்டத்தை அவர்கள் (மாநிலம்) கொண்டு வந்தால், எதிர்காலத்தில் நீங்கள் அவமதிப்புக்கு ஆளாக மாட்டீர்கள், ஏனெனில் நீங்கள் எந்தவொரு குறிப்பிட்ட நபருக்கும் எதிரானவர் அல்ல என்று, நீதிபதி சூர்ய காந்த், பிரதிவாதியின் வழக்கறிஞரிடம் கூறினார்.
“மனுதாரர் (தமிழ்நாடு மாநிலம்) உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகளுக்கு எதிராக, உடனடியாக சட்டப்பூர்வ தீர்வைப் பெற்றதாகவும், அதன்பிறகு நவம்பர் 6 ஆம் தேதி இந்த நீதிமன்றம் வழங்கிய உத்தரவை உண்மையாகவும் அக்கறையுடனும் கடைப்பிடித்ததாகவும் உயர் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்க சுதந்திரம் உள்ளது என்று, உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளது.
மூத்த வழக்கறினர் கபில் சிபல் மற்றும் தமிழ்நாடு அரசு வழக்குரைனர் அமித் ஆனந்த் திவாரி, உயர் நீதிமன்றத்திற்குப் பதிலாக, உச்ச நீதிமன்றத்தில் முன்மொழிவை சமர்ப்பிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரினார். ஆனால், அதற்கு உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. “உயர் நீதிமன்ற நீதிபதிகள் உள்ளூர் நிலைமைகளை பரிசீலிக்க சிறப்பாக தயாராக உள்ளனர்” என்று நீதிபதி தீபாங்கர் தத்தா கூறினார்.